Monday 28 November, 2011

கனிமொழிக்கு ஜாமின் வந்த வழி

மூட நம்பிக்கைன்னு கூட சொல்லிக்கங்க. கலைஞர் காங்கிரஸ்ல யாரை யாரையோ போய் பார்த்து வந்தார். டில்லிலயே போய் தவம் கிடந்தார். ஆனால் கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கல. ஆனா ஸ்டாலின் நிடின் கட்காரிய வெறும் மரியாதை நிமித்தம்தான் பார்த்தார். கூட்டணி பத்தியோ அரசியல் நிலவரம் பத்தியோ வருங்கால இந்தியா பத்தியோ எதுவுமே பேசல. ஆனா கனிமொழிக்கு ஜாமின் கிடைச்சிடுச்சு. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இருந்தா கூட இப்போதைக்கு திமுகவுக்கு ராசியான ஆளுங்க பா ஜ க வுல இருக்காங்க. இனிமே திமுக வுக்கு நல்ல காலம்தான்.

Friday 25 November, 2011

அடுத்தவன் அடிபடும்போது சந்தோசப் படும் ஜந்துக்கள்

தெரிஞ்சவரோ, தெரியாதவரோ அடிப்பட்டதாக கேள்விப் பட்டால் சராசரி மனிதனுக்கு என்ன தோன்றும்? ஐயோ பாவம், ஒன்றும் ஆபத்து இல்லையே என்று விசாரிப்பார்கள். ஒரு சிலருக்கு ஒன்றுமே தோன்றாது.

ஆனாப் பாருங்க. இப்ப சிலர் ஒரு அடியா? ரெண்டு அடியா என்று சந்தோஷமா கேட்கறாங்க. இன்னைக்கு பேப்பர்ல பார்த்தா அடிவாங்கினவர் அப்படிப்பட்டவர் இப்படிப் பட்டவர் அப்ப்டின்னு சொல்லி அடிச்சவனுக்கு வக்காலத்து வாங்கறாங்க

எனக்கு என்ன டவுட்னா இப்படிப் பேசறவங்கள நீ ரா-ஒன்னு கரினாவோட தொப்புளப் பார்த்த அதனால கலாச்சார சீரழிவுன்னு யாராவது அடிச்சா அடிய விடுங்க பாஸ். அந்த அவமானம் உங்களுக்கு பெரிசா தெரியாதா? உங்க வீட்டுப் பொண்ணு நடக்கும்போது கொஞ்சூண்டு இடுப்பு தெரியமாதிரி இருக்கு அதனால ஊர் வாலிபர்கள் கெட்டுப் போறாங்கன்னு சொல்லி ஏதாவது தண்டனை கொடுத்தா நீங்க இப்படித்தான் பேசுவீங்களா பாஸ்.

=============================================
கண்டிப்பாக சரத்பவாரை அடித்த ஹர்விந்தர் சிங்கும் அவனை ஆதரிக்கு அனைத்து கொடூர பிறவிகளும் கண்டிக்க, தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அட்லீஸ்ட் திருந்துங்க பாஸ்

Monday 7 November, 2011

விதி மச்சான்ஸ்

எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற்ற பிறகு இரண்டு மாதத்தில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2011-ல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டது. இன்னும் இந்தச் சுமையையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேலும் ரூ.1.80 விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப்பெறாவிட்டால் மத்தியில் காங்கிரஸýக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் அச்சுறுத்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. திமுக உள்ளிட்ட ஏனைய கூட்டணிக் கட்சிகளும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன.

இந்த பெட்ரோல் விலை உயர்வை நிதியமைச்சகம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இருந்தும்கூட, இதற்கு நிதியமைச்சகம் உடன்படவில்லை. பெட்ரோலிய அமைச்சரும் நிதியமைச்சரும் சந்தித்துப் பேசியும்கூட உடன்பாடு எட்ட முடியவில்லை.

இந்திய அரசு பெட்ரோல் மீது ரூ.14.35 வரி விதிக்கின்றது. இதில் ரூ.6.35 சுங்கவரி, ரூ.6 கூடுதல் தீர்வை, இதனினும் கூடுதல் தீர்வையாக சாலை மேம்பாட்டுக்காக ரூ.2 மேலும் வசூலிக்கப்படுகிறது. பிறகும் ஏன் தங்க நாற்கரச் சாலையில் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்று கேட்டுச் சலித்துவிட்டது.

இதில் ஏதாவது ஒரு தீர்வையில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதில் மத்திய நிதியமைச்சகம் மிகவும் கறாராக மறுப்புத் தெரிவித்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தின. இந்த விவகாரங்கள் நிச்சயமாக பிரதமருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவர் தெரிந்துதான் இந்த விலை உயர்வை அனுமதித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசு தரும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்த நாள் முதலாகக் கூறி வரும் பொருளாதார வளர்ச்சிக்கான பாடம். ஆனால், எந்த நேரத்தில் மானியங்களை விலக்கிக் கொள்வது என்கிற கட்டுப்பாடு இல்லாமல், எப்போது மானியத்தின் தேவை மிக இன்றியமையாததோ அந்த நேரத்தில் விலக்கிக் கொண்டால் எப்படி?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வு 10.1 விழுக்காடு என்ற நிலையில் உயர்ந்து கிடக்கும்போது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருள்களின் விலை மேலும் உயராதா? இதுகூட மத்திய அரசுக்குத் தெரியாதா?

பிரதமர் மொரார்ஜி தேசாய் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை என்னவென்றால், நியாயவிலைக் கடைக்குப் போய் சர்க்கரை வாங்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போனது என்பதுதான்.

ஜனதா ஆட்சிக்கு மொரார்ஜி தலைமையேற்றிருந்த நாளில், சர்க்கரை அரசியலில் இருக்கும் அனைத்துச் சிக்கலையும் நீக்கியதுடன், வெளிச்சந்தை சர்க்கரையின் விலையும், நியாயவிலைக் கடையில் கிடைக்கும் சர்க்கரையின் விலையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் நிலைமையை உருவாக்கினார். அதற்கு முன்புவரையிலும், நியாயவிலைக் கடையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் பாதியாக, மானியம் கொடுத்து விலைக்குறைப்பு செய்யப்பட்ட சர்க்கரை கிடைத்த காரணத்தால் மக்கள் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கினார்கள். விலை எல்லா இடங்களிலும் ஒன்று என்றான பின்பு இந்த மானியம் குறித்தோ அல்லது நியாயவிலைக் கடைச் சர்க்கரை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. தற்போது மீண்டும் நியாயவிலைக் கடையில் சர்க்கரை கிலோ ரூ.13.65-க்கும் வெளிச்சந்தையில் ரூ.30-க்கும் விற்கப்படும் நிலை வருவதற்கு வழிசெய்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

விலைஉயர்வு வெறும் 6 விழுக்காடு அளவுக்கு இருக்குமானால், பெட்ரோல் விலை உயர்வு குறித்து இந்த அளவுக்கு யாரும் எதிர்ப்பு சொல்லப்போவதில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே போகும்போது இத்தகைய பெட்ரோல் விலை உயர்வினால் மற்ற பொருள்களின் விலையும் உயரத்தானே செய்யும்?

பெட்ரோல் விலையை அரசு உள்வாங்கி, மானியம் தந்து ஈடு செய்யும் வழக்கம் நீக்கப்பட வேண்டும் என்பது அரசின் உறுதியான திட்டம் என்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? யார்யாரெல்லாம் பெட்ரோலை அதற்குரிய விலையில் வாங்க வேண்டும் என்பதையும், யார் யார், எந்தெந்தப் பயன்பாட்டுக்கு பெட்ரோலை மானிய விலையில் பெறலாம் என்பதையும் பிரிக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே விலையில் பெட்ரோல் வழங்குவதன் மூலம், பெட்ரோலியப் பொருளை வீணடிப்பவர்கள் பணம் வசதி படைத்தவர்களாகவும், விலைஉயர்வால் அவதிப்படுவோர் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களாகவும் இருக்கிறார்கள்.

கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி வந்து கொடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெறும் லாபம் அபரிமிதமானது. இதை ஏன் அரசு நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களே செய்யக்கூடாது? என்ற கேள்விக்கும் பதில் இல்லை. ஏன் தீர்வையை குறைந்தது ரூ.2 விலக்கு அளித்து, இந்த ரூ.1.80 விலை உயர்வைத் தவிர்க்கக்கூடாது? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

பத்திரிகைகளில் தங்கம் விலை என்று தனி பத்தியில் ஒவ்வொரு நாளும், "இன்று ரூ.40 உயர்ந்தது", "இன்று தங்கம் விலை ரூ.10 குறைந்தது' என்று செய்தி வருவதைப் போல, இனி இந்தியாவில் பெட்ரோலுக்கும் தினசரி விலை விவரம் எழுதப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்பதுகூடத் தெரியாமல், ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இன்னொருபுறம் விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசிக்கும் விசித்திரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். நடப்பது பொருளாதார மேதைகளின் ஆட்சியாயிற்றே!

நன்றி:-http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=502899&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Sunday 30 October, 2011

கணவனில்லாதவளின் குழந்தை

இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி வந்தது. திருமணமான புது மாப்பிள்ளை ஏரியில் மூழ்கி இறந்து விட்டாராம். என்ன கொடுமை பாருங்கள். இனி அந்தப் பெண்ணின் கதி? சில நாள் குடும்பம் நடத்தியதில் ஒரு வேளை குழ்ந்தை உருவாகி இருந்தால் அந்தக் குழந்தை இனி தகப்பன் இல்லாத குழந்தைன்னுதான் சொல்வாங்க.

இதுக்கெல்லாம் தான் என்ன தீர்வுன்னு யோசிச்சு பாருங்க. சுலபமா ஒரு தீர்வு இருக்குங்க. ஏரிகளையெல்லாம் மூடிட்டா போதுங்க. ஏற்கனவே கல்பாக்கத்தில் ஏரி இருக்கு. தாராப்பூர்ல ஏரி இருக்குன்னு சொல்றாங்க. சொல்லிட்டுப்போறாங்க. இங்க ஏதாவது மாப்பிளை விழுந்து செத்தா என்ன நடக்கும் யோசிச்சுப் பாருங்க.

வாங்க நாம ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்போம். ஏரிகளை மூடச்சொல்லுவோம். பயமே படாதீங்க. யாராவது வந்தால் அவங்க வீட்டுப் பொண்ணு இப்படி நின்னா என்ன பண்ணுவீங்கண்ணு கேட்போம். கண்டிப்பா ஒத்துவிக்குவாங்க. இனிமேல் மாப்பிள்ளையோட உயிர் உத்தரவாதமா இருக்கும்ம்னு நம்பிக்க்லாம்.

இனியாவது ரோஷம் வருமா?

எனக்கொரு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு திமுக காரங்க மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் மேட்டர் ஏன் இன்னும் காங்கிரஸோட காலடியில் திமுக இருக்காங்க அப்படிங்கறதுதான்.

ஆட்சி பிடிக்க, பதவிய காப்பாத்திக்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுவும் போச்சு.

கனிமொழிய காப்பாத்த அப்படின்னு சொன்னாங்க புடிச்சு உள்ள வைச்சு பல நாள் ஆச்சு, ஒண்ணும் நடக்கறமாதிரி தெரியல. பேச நானும் தியாகிதான் நானும் தியாகிதான் சொல்லிட்டு அன்னா ஹஜாரே மாதிரி இனிமேல் சிறையில்தான் இருப்பேன். ஜாமீன் கிடைச்சாகூட வெளிய வரமாட்டேன். குற்றவாளி இல்லைன்னு முடிவு வந்தபிறகுதான் வெளிய வருவேன்னு தைரியமா சொல்லிகிட்டு இருக்கலாம். ஏற்கனவே கல்லக்குடி போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம். ஓடுற ரயில்பாதையிலயே தலை வச்ச அப்பா, அம்மாவோட ரத்தம் ஓடுற ஆள்தான் தைரியத்துக்கு குறைச்சல் இருக்காது. ஜாமின் கிடைச்சதுன்னா வெளிய வந்திரலாம். அது வரைக்கும் பில் டப்லயே இருக்கலாம். அதுவும் பண்ண மாட்டேங்கறாங்க.

அழகிரி மத்திய அமைச்சரா கொஞ்ச நாளைக்கு இருந்திட்டு போறாருன்னு சொன்னா அவர் அமைச்சரா இருக்கறதால ஒரு நன்மையும் இருக்கறமாதிரி தெரியல. அம்மா அவர தொரத்து தொரத்து தொரத்தராங்க . இப்ப என்னடான்னா அஜித் சிங் கூட கூட்டணி போடணும் அப்படிங்கறதுக்காக அழகிரியோட துறையையும் புடிங்கிடுவாங்க போல இருக்குது.

உள்ளாட்சித் தேர்தல்ல தனியா நின்னு மிரட்டுனாங்கன்னு பார்த்தா அவங்கதான் கூட்டணிக்கு வராம தனியா போன மாதிரி ஆயிட்டுச்சி. இவரு திரும்பவும் போய் டெல்லில சமாதானம் பேசிட்டு வராரு.

என்ன கொடுமை இது? ஒரு டெட்ர் இப்படின்னு டெயில் எண்ட்டர் மாதிரி பயந்து நடுங்கறது அவருக்கு மட்டுமிலல. அவர் வாழற தமிழ்நாட்டுக்கே அசிங்கம். இன்னும்கூட ரோஷம் வரலேன்னா எப்படி?

Wednesday 26 October, 2011

கலைஞர் என்னும் பொதுநலவாதி

தமிழ்கத்திற்கு பிரயோஜனம் நிறைந்த கலைஞ்ரின் டெல்லி பயணம்

1. கூடங்குளம் அணுமின் நிலையம்,
2.இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம்,
3. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது,
4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது,

ஆகிய முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி கலைஞர் அவர்கள் பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் சோனியாவை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.

அதே நேரத்தில் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய ரெண்டு அமைச்சர்கள் பற்றியோ எம்.பி.கனிமொழி ஜாமின் பற்றியோ பேசவில்லை.

பாருங்களேன். என்ன ஒரு பொறுப்புணர்ச்சி. தமிழக மக்கள் அவரது பதவியைப் பிடுங்கி உள்ளாட்சிகளில் அதகளம் பண்ணியபிற்கும் கூட தமிழ்க மக்களுக்காக உழைக்கிறார். பிரதமரிடம் நாடுநிலைமை பற்றி பேசுகிறார். கூட்டணிக் கட்சி தலைவரிடம் அவரது உடல் நிலமை பற்றி மட்டும் பேசிவிட்டு வருகிறார். அவரது கட்சி நலம் பற்றியோ குடும்ப நலம் பற்றியோ எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் மட்டும் செலவளித்துள்ளார்.

**********************************************************
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
************************************************************

இதையெல்லாம் தமிழ்நாட்டில் நேற்றுப் பிறந்த குழந்தை கூட நம்பாது. எதுக்காக இப்படியெல்லாம் பூசி மெழுகறாங்கன்னே தெரியல.
மத்திய அரசு கூட்டணில இருக்கறதால கலைஞ்ர்க்கோ, கட்சிக்கோ எந்த ஒரு நன்மையும் இருக்கறதா தெரியல. குறைஞ்சது போலிஸ் கேஸாவது இல்லாம பாத்துக்காவங்கன்னு பார்த்தா அதெல்லாம் அவங்களோட தூண்டல்னால் நடக்கறமாதிரியே இருக்கு.
இல்ல காங்கிரஸுக்கு பயங்கர ஓட்டு வங்கி இருந்து அவங்க இருந்தாதான் தமிழ்நாட்டில் ஆட்சிய புடிக்கமுடியும்ன்னுநினைச்சா அதுவும் இல்லைன்னு ஆயிறுச்சி.

பொதுநலனுக்காக சிந்திக்கறவங்கதான் ஆட்சிக்கு வரணும். குறைந்த் பட்சம் சுயநலமா சிந்திச்சா தான் குடும்பத்தக் காப்பாத்த முடியும். இவங்க சுயநலமாவும் இருக்க தெரியல. பொதுநலத்துக்காக செயல் படுறதப் பத்தி கேட்கவே வேண்டாம்.

பேசாம ஒவ்வொரு நாளும் சிறையில் இருப்பதைப் பற்றி லைவ் டெலிகாஸ்ட் போட்டு அதையே ஒரு போராட்டம் மாதிரி காட்டி ஒரு பில்டப் கொடுக்கலாம். நூறாவது நாள் கொண்டாடலாம்.

திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.

Tuesday 25 October, 2011

வேலாயுதம் ஒருஜினல் தீபாவளி?

விஜயின் வேலாயுதம் படம் பார்த்தீங்கண்ணா அவரோட அரசியல் பிரவேசத்திற்கும் படத்தோட பேருக்குமே நெருங்கிய ஒற்றுமை இருக்கறமாதிரி இருக்குங்க.
மொதல்ல விஜய் திமுக அனுதாபியா இருந்தார். ஸ்டாலின் மேல இருக்கற பற்று காரணமா இளைய தளபதின்னு பேரு கூட தனக்குத்தானே வச்சிக்கிட்டு இருந்தார். அந்தக் காலத்திலயே படத்தில ஒரு பாட்டுப் பாடி இந்தப் பாடலைப் பாடியவர் இளைய தளப்தின்னு போடச் சொல்லி அத டிவியில ஒளிபரப்பி ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தார். உதயான்னு ஒரு படம் கூட எடுத்தார். திமுக் அரசாங்கம் மூலமா நன்கொடை எல்லாம் கொடுத்தார்.

அதற்கப்புறம் திமுகவுல் உள்ளவர்களுக்கு அவருக்கும் என்னவோ பிரச்சனைகள் சொல்லிக்கிட்டாங்க. அவர் படமே ரிலிஸ் ஆக போச்சு. அப்புறம் அம்மாவ சந்திச்சாரு. அப்படி இப்படின்னு காவலன் ரிலீஸ் பண்ணீனாரு. தேர்தல்ல அவங்க அப்பா அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தாரு. அதிமுக செயித்தவுடனே ஒரு சூப்பரா ஒரு ட்ரெயிலர வேலாயுதம் படத்துக்கு எடுத்து ரிலீஸ் ப்ண்ணினாரு.



====================================================

புராணக் கதைல பாத்தீங்கண்ணா அப்பா சிவபெருமானோட மகன் முருகன். சிவ்பெருமானோட வரம் பெற்ற ஆட்கள் சூரன் குரூப்ஸ் இம்சை தாங்க முடியாம போச்சு. அப்பானால அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமை. இப்பத்தான் அம்மா எண்ட்ரி கொடுக்கறாங்க. அப்பாவோட புள்ளைக்கு தன்னோட சக்திய திரட்டி ஆயுதமா தர்ராங்க. அதுதான் வேலாயுதம். அத பயன்படுத்தி முருகன் சூரன் பிரதர்ஸை அழிச்சர்ராரு. இதுதான் வேலாயுதம் கதை. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு ஒற்றுமை ஓடிக்கிட்டே இருக்கு பாத்தீங்களா.

சோ வேலாயுதம் கண்டிப்பா வெற்றித்தான்னு நினைக்கறீங்களா


ஆனா பாத்தீங்கண்ணா இன்னைக்கு தீபாவளி. தீபாவளி ஏன் கொண்டாடரோமுன்னா ம்கன் பண்ற இம்சை தாங்கமுடியாத அம்மா அவங்களே டைரக்டா வந்து கதையை முடிக்கறாங்க. என்னமோ தீடின்னு இந்தக் கதை ஞாபகம் வந்து தொலைக்குது.

காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைச்சத விட வேலாயுதம் படத்துக்கு சாதா தியெட்டர்களாதான் கிடைச்ச மாதிரி தோணுது. ஏம்பாஸ். ஏதாவது தீபாவளி ஆகிப் போயிட்யுமா?

Sunday 23 October, 2011

திமுக, திரும்ப வருவோம்ல

பாருங்க பாஸ், உள்ளாட்சித் தேர்தல்ல அதிமுக பெரிய வெற்றி அடைந்தாலும் திமுக ஒரு மூணில ஒரு பாகம் ஜெயிச்சிருக்காங்க பாஸ். திமுக ஜெயிச்ச இடங்கள் பார்த்தீங்கன்னா ஒரு உண்மை தெரியும். பெரும்பாலும் பழைய அமைச்சர்களோட நெருக்க்கமான ஆட்கள் தோத்து போயிருக்காங்க. அதே நேரத்தில் நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க. காங்கிரஸ் கூட்டணிய கழட்டி விட்ட பிறகும், ஆளுங்கட்சி ஜெயிச்சாத்தான் ஊருக்கு சலுகை கிடைக்கும் என்ற எண்ணத்திற்கும் மேலாக சட்ட மன்ற தேர்தல விட இந்த தேர்தல்ல திமுக அதிகமா ஓட்டு வாங்கி இருக்காங்க.

திருச்சி இடைத்தேர்தலிலும் கூட கொஞ்சம் தான் ஓட்டு கொறச்சிருக்கு. நேரு ஜெயிச்சா சட்டசபைக்கு போகவே மாட்டார். பெரும்பாலும் வெளிநடப்புதான். இல்லையின்னா உள்நடப்புன்னு தெரிஞ்சும். காங்கிரஸ், பாமக ஓட்டுக்கள் இல்லாமலே போன தேர்தல்ல விட இப்ப கொஞ்சம்தான் ஓட்டு கொறைஞ்சிருக்கு. ஒருவேளை நேருவிக்கு பதிலா யாராவது மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிக் காரங்க யாரையாவது போட்டு இருந்தா திருச்சில ஜெயிச்சுக் கூட இருக்கலாம். திமுக விட இந்த உள்ளாட்சித் தேர்தல் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கழட்டிவிட்டு, அவங்கள் எதிர்க்க ஆரம்பிக்கணும். 2ஜி ஊழல்ன்னு சொல்றதுல நடந்தது என்ன? ஏன் இப்படின்னு திமுக காரங்கள மாட்டிவிட்டிருங்காங்க அப்படின்னு ஊருக்குச் சொல்லணும். காங்கிரஸ் கட்சிய அழிக்கணும்னா அது திமுகவால மட்டும்தான் முடியும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

கேப்டன் பார்க்க வேண்டிய வீடியோ

கருப்பு எம்ஜியார் தனது வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி பார்த்து இருக்கார். அவர் திரும்பவும் வளர்ச்சி பாதையில் திரும்ப இந்த வீடியோ காட்சியப் பார்த்தாலே போதும். இதப் புரிஞ்சி அரசியல் நடத்தினா அடுத்த பத்து, பதினைந்து வருஷங்களுக்கு பா.ம.க. நிலைமையில் நிற்கலாம். இல்லைன்னா, இப்ப பாமக நிலைமைக்கே போய் விடுவார். ஆல் தி பெஸ்ட் கேப்டன்

Sunday 16 October, 2011

புரட்சித் தலைவன் ஆ.ராசா

ஊழல் ஊழல்ன்னு பேசுவாங்க பாஸ், உலகத்தில பல ஊழல்கள் நடந்திருக்கு. அமெரிக்காவுல நடந்திருக்கு, ரஷ்யாவில நடந்திருக்கு, வெளிய தெரிஞ்சு ஆட்சியே மாறிப் போயிருக்கு. ஊழல்ண்ணா என்ன நடக்கும். பொதுமக்களுக்காக செய்ய வேண்டிய வேலைய தனக்கு வேண்டியவங்களுக்குக் கொடுத்து அதன் மூலமா பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள்ல மேக்ஸிமம் தன்னோட பாக்கெட்டுக்கு கிடைக்கறமாதிரி பண்ணிக்குவாங்க. அதனால அந்த திட்டம் சீரளிஞ்சு போயிடும். ஒரு சிலர் போணாப் போகுதுண்ணு ஒரு 10% பொதுமக்களுக்கு கிடைக்கற மாதிரி பண்ணுவாங்க.

ஆனா பாருங்க பாஸ். இந்த 2ஜி ,மேட்டருல நடந்ததா சொல்ல காலத்துக்கு முன்னாடி நமக்கு பெரு நகரங்கல்ல மட்டும் செல்ஃபோன் கனெக்‌ஷன் இருந்திச்சு. சிருநகரங்கள்ல கிடைக்க ஆரம்பிச்சிட்டு இருந்திச்சு. நிறைய அலைக் கற்றை கையில இருந்திச்சு. வந்தவங்களுக்கெல்லாம் டக் டக்ன்னு கொடுத்த பின்னாடி இப்ப பாமர மக்கள்ட்டயும் செல்ஃபோன் வ்ந்திருச்சு, குக்குக் கிராமங்களுக்கு கூட செல்ஃபோன் இருக்கு. எழுதப் படிக்க தெரியாதவங்க கிட்டக் கூட செல்ஃபோன் இருக்கு, யூஸ் பன்றாங்க.

இந்த மாதிரி ஒரு புரட்சி ஏற்படுத்தனவங்கள் பாராட்டாம புடிச்சு உள்ள போட்டு வச்சிருக்காங்க. நாலு பேருக்கு நல்லது நடந்திருக்கு. அப்பாவி மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இப்படி கொடுத்த அலை கற்றை கைமாறி வேற கம்பெணிக்கு போனாக்கூட ஈஸியா கண்டுபிடிக்கற வசதி இருக்கு. அப்புறம் என்ன பாஸ். ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிட முடியும். 120 கோடி மக்கள் ரஸ்க் சாப்பிட வச்சிருக்காங்க. அப்புறம் ஏன் பாஸ் ஊழல் ஊழல்ன்னு சொல்றாங்க.

நிதியமைச்சருக்கு முறைப்படி சொல்லியிருக்காங்க. பிரதமர்ட்ட ஆலோசனை வாங்கி இருக்காங்க. அப்புறம் எங்க ஊழல் வந்திச்சு.

ஆடிட் பார்ட்டி எழுதியிருக்காங்க லட்சம் கோடி வருமான இழப்பு அப்படின்னு. அது எப்படின்னா நீ நல்லாப் படிச்சு பிளேஸ்மெண்ட் ஆனா சிவாஜிமாதிரி ஃபாரின்போயி 200 கோடி சம்பாரிச்சிருக்கலாம் அப்படிங்கற மாதிரி எழுதி இருக்காங்க. அப்படியெல்லாம் ஏழம்போட்டிருந்தா கிராமத்துக்கெல்லாம் எப்படி பாஸ் ஃபோன் கிடைச்சிருக்கும்.

இவங்க ரொம்ப சீப்பா கொடுத்ததாலதான பாஸ் நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்த ஃபோன் பில் இப்ப ரொம்ப கொரைஞ்சு போயி இருக்கு. ஏழம் போட்டு ரேட்ட்ட ஏத்தி விட்டுருந்தா நமக்கும் ஃபோன் பில் ஏறி இருக்காதா பாஸ்?

அப்புறம் ஏன் பாஸ் ராசாவ புடிச்சு உள்ள வெச்சிக்கிட்டு விசாரிச்சிக்கிட்டே இருகாங்க.

Saturday 8 October, 2011

கட்டபொம்மன் வசனம் உண்மைதான் - ஆதாரத்துடன்

கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!


இடுகை பதில் இடுகைதான் இது. கட்டபொம்மனைப் பற்றி அவதூறு சொல்வது போல எழுதப் பட்டு இருக்கிறது. கொஞ்சம் அறிவே இல்லாமல், சொறனை இல்லாமல் யோசிக்காமல் எழுதப் பட்டு இருக்கிறது. கண்டிப்பாக எதுகை மோனையோடு பேசியிருக்க மாட்டார்தான்.


ஆனால் அவர் காரசாரமாகப் பேசியதால்தான் கோட்டையிலேயே அவரை தங்க (சிறை ) வைக்கப்பட்டார். அங்கு கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை இடுகையாளர் ஒத்துக் கொள்கிறார். இதுவே கட்ட்பொம்மன் வீரன் தான் என்பதற்கு உதாரணம். ஜாக்சனின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு கட்ட பொம்மனைப் பற்றி பேசுவது காமெடியோ காமெடி. அதற்கு பிரபல பதிவர்கள் சைங் சக் வேற.. வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னோட ஒரு பக்கத்து மீசையை எடுத்திட்டுப் போய்ட்டான்னா எழுதி வைச்சிருப்பான்.

நல்லாப் பாருங்க. நாட்ல் பல புரட்சி வீரர்கள கொலை காரார்களாக, கொள்ளைக் காரர்களாக, கற்பழிப்பு வாதிகளாக , கஞ்சா கடத்துபர்களாக கேஸப் போட்டு தூக்குல போடுவதுதான் உலக வழக்கம். நம்ம வீரர்களைப் பத்தி இதுக்கும் மேலயும் எழுதி வைச்சிருப்பாங்க. படிச்சிட்டு மத்தவஙககிட்ட பேசறதுக்கு முன்னாடி கொன்சூடு யோசிங்கப்பூ

Wednesday 5 October, 2011

இனிமேல் நான் அன்னா ஹஜாரே ஆதரவாளன்

நான் அண்ணா ஹஜாராவை ஆதரிக்க தொடங்கிவிட்டேன்.

ஏன்ன்னா

1.அவர் தேர்தல்ல போட்டியிடமாட்டேன்னு சொல்லிட்டார்.

2.ஆனா காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்லிட்டார்.

3.அவர் உண்ணாவிரதம் இருந்தாலே அங்கு வரப்போற மக்களுக்கு நல்ல பொழுது போக்கு தீனி கிடைக்கும் இனி இவர் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சா ம்க்களுக்கு எவ்ளோ பொழுது போக்கு, எவ்ளோ தீனி. ம்க்கள் பணம் மக்களுக்காக தண்ணி மாதிரி செலவு செய்ய ஆரம்பிச்சிருவாங்க

4.எடியூரப்பா, மோடி மாதிரி ஆட்களை பகைச்சிக்க விரும்பல. இது போன தேர்தல்ல வடிவேலு பாணி. (அவர் கடைசி வரைக்கும் அம்மாவை திட்டல) நம்ம ஊர் கார ஃபாலோ பண்றவர நாமதான ஊக்கம் கொடுக்கணும்.

5அவர் போற வார எடத்துக்கெல்லாம் கைமுறுக்கு, சிப்ஸ், மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்கள் விற்பனை பெருகும். அதுனால் சிறு தொழில்களும் வளரும்.

6.ராகுல் காந்தி மாதிரி வளர்ந்து வரும் ஒரு மாபெரும் தலைவருக்கு தினமும் அறிக்கை கொடுப்பது, பதில் கொடுப்பது மாதிரி பயிற்சி அளித்து வருகிறார். அதனால் அவர் எதிர்காலத்தில் அமெரிக்கா, சீனா விவகாரங்களில் பதில் சொல்லும்போது ஓரளவு தேறி விடுவார்.

7.இளைய தளபதி விஜயின் ஆதரவு அன்னா ஹஜாராவேவுக்கு இருக்கு அதனால் பன்ச் டயலாக பிண்ணி எடுப்பார். ஏற்கனவே விஜய் பின்பற்றி வரும் மகேஷ் பாபுவின் வழியும் பன்ச் வழிதான் என்பது ஊருக்கே தெரியும்.

=====================================================
ஜனநாயகம் வாழ , ஊழல் பணம் வெளியே வர அன்னா எதிர்ப்பவர்களை, எதிர்த்து நில்லுங்கள்.

Thursday 29 September, 2011

பதிவுலகில் அன்னா ஹஜாரே

ரெண்டாம் சுதந்திரப் போரை முன்னோக்கி நடத்தி வரும் அன்னா ஹஜாரே அவர்கள் இப்ப பிளாக்கர், ஃபேஸ் புக் , டிவிட்டர் எல்லாத்திலும் ஒரு அக்கவுண்ட் ஓபென் செய்து நாடு முழுக்க சுதந்திர உணர்ச்சிய ஊட்டிக்கிட்டு இருக்காராம். ஏற்கனவே நமெல்லாம் பதி வுலகில் உட்கார்ந்து நாட்டு எவ்வள்வோ நன்மைசெய்ய முயற்சி செய்துக்கி ட்டு இருக்கோம். இப்ப அன்னா வும் சேர்ந்திக்கிட்டாருல்ல, இனிமேல் நாட்டு ரெண்டாம் சுதந்திரப் போர், மூணாம் சுதந்திரப் போர் அப்படி இப்படின்னு ஒரே அலப்பரை கிளப்பப் போகுது.

பதிவுலகில் ஐடியா மணி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற பதிவர்களின் டவுசரை அன்னா ஹஜரே கிளிப்பார் என்பது உறுதி, ஆனால் அவர் தமிழ் மணம், இண்ட்லியில் சேர்ந்திட்டாரான்னு தெரியல, தெரியலன்னா என்ன அன்னா பதிவ நாம் சேர்த்துவோம்.

ஏற்கனவே ஃபேக் ஐ பி எல் பிளேயர் அப்படின்னு ஒருத்தர் ஒரு ப்ளாக ஆரம்பிச்சு வெகு சீக்கிரத்தில் நிறைய ஃபாளோயர் அப்புறம் ஹிட்ஸ் வாங்கிக் குவிச்சாருல்ல அவரை அன்னா பீட் பண்ணிருவாருன்னு நினைக்கிறேன்

ஜெய்ஹிந்த்., ஓ சாரி சாரி
\வந்தே மாதரம்

https://annahazaresays.wordpress.com வேணும்னா ஒரு எட்டு எட்டிப் பார்த்திடுங்க.

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது

சில விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் உண்மை, திரிக்கப்பட்ட உண்மை, உண்மை அல்லாத செய்திகள் பற்றி தெரிந்து தெளிய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது

==================================================================

நன்றிhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=322332


:"சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்த குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,'' என, இந்திய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.


கூடங்குளம் குறித்து, இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்:
* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.
* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.
* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.
* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.
* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.
* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.
* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை.


- ஹெச்.ஷேக்மைதீன் -

Saturday 24 September, 2011

உலகமகா ரகசியக் கடிதம்

உலகமகா ரகசியக் கடிதம் இன்னிக்கு பத்திரிக்கைல வந்திருக்கு மக்களே, படிச்சுப் பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க. மேல்பகுதில சீக்ரெட் அப்படின்னு எழுதியிருக்காங்க பாருங்களேன்

Friday 23 September, 2011

கலைஞர் பேச்சை அப்படியே பின்பற்றும் ஜெ

அரசியல் அனுபவஸ்தர் கலைஞர் ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொல்லியிருக்கார். சட்ட சபை, நாடாளுமன்றத்துக்குத்தான் கூட்டு உள்ளாட்சிக்கு கிடையாதுன்னு. காலங்கடந்து வந்தாலும் சூப்பரான வார்த்தைங்க இது. அதனாலதான் ஜெ அவுக கூட அத அப்படியே கப்புன்னு புடிச்சிக்கிட்டு தனியே நிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே நிட்கட்டுமே, என்ன பலம், எவ்வளவு பலம்ன்னு தெரிஞ்சிக்கிட்டும். போன உள்ளாட்சி தேர்தல்ல கேப்டன் தனியா நின்னுதானே அத்தனை கவுன்சிலர் போஸ்ட் ஜெயிச்சாரு. அதை பார்த்துத்தானே அம்மா, வைகோவையே கழட்டி விட்டாங்க. இன்னைக்கு கேப்டன் அமைச்சர் பதவிய விட பவரான பதவில இருக்கார். இந்த தேர்தல்ல கம்யூனிஸ்ட்டுங்க எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு செல்வாக்கு இருக்குன்னு சொல்றாங்கல்ல அதையும்தான் பார்ப்போம்.

தனித்தனியா நின்னாங்கன்னு வைங்க, திமுக, அதிமுக நல்லா ஜெயிச்சு வருவாங்க. ஆளுங்கட்சி அதுனால் ஆளுங்கட்சி காரு ஜெயிச்சா நல்லதுன்னும் சிலர் நினைக்க்லாம். கேப்டன் போன உள்ளாட்சிலயே தன்னோட பலத்தை காட்டி இருக்காரு. அதைவிட ரெண்டு மூனு கவுன்சிலர் போஸ்ட் கூட ஜெயிக்கலாம். ஜாதிக்கட்சி ஆளுங்கல்லாம் அவங்க இருக்கற பகுதிலயே மண்ணக் கவ்வுவாங்க பாருங்க. அடுத்த தேர்தல்ல நான் நாலுகோடி பேர்ருக்கு தலைவன்னு எந்த ஜாதி ஆளும் சொல்ல முடியாதுல்ல, கம்யூனிஸ்ட் பவரும் தெரிஞ்சி போயிரும்.

காங்கிரஸோட பவர், போங்க பாஸ் ராஜினாமா பண்ணின தலைவர்ருக்க்கு பதிலா அடுத்த ஆளு போட வே ஆள் இல்லாம திண்டாடுறாங்க அவங்க வந்து கவுன்சிலர் எலக்சன்ன்ல நின்னு ஜெயிச்சு, பார்ப்போம். கேப்டன கரெக்ட் பண்ணி ஏதாவது ஒண்ணு ரெண்டு சீட் செயிக்கலாம்னு ட்ரை விடறாங்க போல, அதுக்கு சில பத்திரிக்கைகலும் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. அப்படி சேர்ந்தா கேப்டன், சிரஞ்சீவிய விட படு பரிதாபமா போயிடுவார் பாருங்களேன். எப்படியோ கலைஞர் சொன்னத ஜெ, முதலான எல்லாத் தலைவர்களும் கேட்டுக்கிட்டா ஒரிஜினல் ஜனநாயகம் ஓரளவு டெவலப் ஆயிடும்ல அதுவரைக்கும் ஹேப்பிதான்.

Monday 19 September, 2011

கேரளா மேட்டரே ஒரு மாதிரியாத்தான் இருக்கு

பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதால், ஏராளமான கேரள வனப்பரப்பு அழிவதுடன், பரம்பிக்குளம் அணை, தமிழகத்திடமிருந்து கை நழுவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் பிரதான அணையான பரம்பிக்குளம் அணை, கேரள வனப்பகுதியில் உள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இந்த அணை, இப்போதும் நமது பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலேயே உள்ளது. அணை அமைந்துள்ள வனப்பகுதி, கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.


இந்த அணைப்பகுதிக்குச் செல்வதற்கு, தமிழகத்திலுள்ள சேத்துமடை வழியாக, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதியைக் கடந்தே செல்ல வேண்டும். இதற்கு தமிழக வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பரம்பிக்குளம், டாப்ஸ்லிப் வனப்பகுதிக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால், வனம் பாதுகாப்பாகவுள்ளது.
அப்ப இருவழி பாதை அமைச்சா வனம் பாழாப் போயிருமா?
இந்நிலையில், இந்த அணைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கடந்த 13ம் தேதி வந்திருந்தார்.
அப்போது, "பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடியாக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்போம்' என அவர் அறிவித்தார்.

இதுல என்ன தப்பு இருக்கு?

ஏற்கனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான மோதல் வலுத்துவரும் நிலையில், பரம்பிக்குளம் அணைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்கப் போவதாக, கேரள முதல்வர் அறிவித்திருப்பது, தமிழகத்தில் பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஆக்ரோஷமாகப் போராடி வரும் ம.தி.மு.க., இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏன் அதிமுக, திமுக கட்சிகள் போராடறதில்லை? இத்தனைக்கும் இரெண்டு கட்சிலயும் வெயிட்டான் ஆட்கள் அங்க இருக்காங்க

முல்லைப்பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்வதைக் கண்டித்து, கேரள முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்று கைதான ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் இதுபற்றி கூறியதாவது:பரம்பிக்குளத்துக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதில், இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன. 390 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ள பரம்பிக்குளம் வனம், கடந்த 2010 பிப்.,19ல் மத்திய அரசால் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த வனப்பகுதி, மிகவும் உச்சபட்சமாக பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதியாகும்.


நேரடி வழித்தடம் அமைக்க வேண்டுமெனில், ஏராளமான வனப்பகுதியை அழிக்க வேண்டியிருக்கும். வனம், வன விலங்குகள் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க உலகமெங்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.புலிகள் காப்பகத் திட்டத்துக்காக, காலம் காலமாக வனத்துக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களையே வெளியேற்ற மத்திய அரசு இழப்பீடு வழங்கி வரும் நிலையில், "காட்டை அழித்து ரோடு போட்டு, சுற்றுலாவை மேம்படுத்துவேன்' என்று கேரள முதல்வர் கூறுவது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்.அடுத்ததாக, பரம்பிக்குளம் அணைக்கு கேரள வனப்பகுதியில் பாதை அமைப்பதன் மூலமாக, அணையின் கட்டுப்பாட்டை தமது பிடிக்குள் கொண்டு வர வேண்டுமென்பதே கேரள அரசின் மறைமுக நோக்கம்.

இப்படியெல்லாம் திட்டம் போடுவாங்களா? அப்படியே கோயமுத்தூர் வரைக்கும் ரோடு போட்டு கோயமுத்துரையும் கைப்பற்றி விடுவாங்களோ?

ஏற்கனவே, முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைகளில் கேரள அரசு செய்து வரும் அத்துமீறல், உலகிற்கே தெரிந்ததுதான்.கேரள அரசின் இந்த முயற்சிக்கு, மத்திய அரசு எந்த வகையிலும் உடன்படக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இரு மாநில உறவுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இந்த விஷயத்தில், பரம்பிக்குளம் அணையை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டியது, தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கடமையாகும்.இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்தார்.

மத்திய அரசு உடன்படவில்லை அப்படின்னா செய்யமாட்டாங்களா சார்?

இதே கருத்தை "ஓசை', தமிழக பசுமை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. பரம்பிக்குளம் அணைப்பகுதியில் ரோடு அமைக்க முயற்சி செய்தால், அனைத்து சூழல் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து சட்டரீதியாகவும், நேரடியாகவும் போராடவும் இந்த அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.


விழிப்பார்களா விவசாயிகள்?பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பரம்பிக்குளம் அணை தான். இந்த அணையின் மொத்த கொள்ளளவு, 17.5 டி.எம்.சி.,ஆகும். முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 15.5 டி.எம்.சி.,மட்டுமே. அந்த அணைக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதி, பரம்பிக்குளம் அணைக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.


கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைத்தால், நமது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அணை கை நழுவும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் பயன் பெறும் நான்கரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், இத்திட்டத்தால் குடிநீர் வசதி பெறும், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களும் பாதிக்கப்படும். விரிசல் பட்டுக்கிடக்கும் விவசாய அமைப்புகள், இதிலாவது ஒன்று திரண்டு போராடினால்தான் இதைத்தடுக்க முடியும்.

அடங்கொப்பா, அதுதான் நாட்டாமை, சூர்யவம்சம் மாதிரி படங்கள் எல்லாம் இப்ப வர்ரதே இல்லையா?


செய்திhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=315602வெளியானது அவர்களுக்கு நன்றி, வண்ணத்தில் இருப்பது நமது கேள்விகள்.

Friday 16 September, 2011

தணிக்கையில் சிக்கிய அண்ணா பல்கலை கழகம்

மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கையின் அடிப்படையில்தான் 2ஜி விவகாரம் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. அந்த தணிக்கைத் துறை கொடுத்துள்ள புதிய அறிக்கை. அண்ணா பல்கலைக் கழகத்தை ஒரு வாரு வாரியிருக்கிறது. உலகத் தமிழ் மக்களுக்காக இங்கு
*************

தமிழக அரசின் 2009- 10-ஆம் நிதியாண்டின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்த, மத்திய கணக்கு தணிக்கை துறை சட்ட சபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது.
ஆகியவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டுள்ளது. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 32 இளநிலை படிப்புகளுக்கும், 48 முதுநிலைப்பட்டப்படிப்புகளுக் கும், சுயசார்பு படிப்புகளாக நடத்த அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், குறைந்த பட்சமாக 85 மதிப்பெண்ணும், நிரந்தர அனுமதி வழங்க 90 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல், குறைந்த பட்ச மதிப்பெண்ணை 85-ல் இருந்து 50 ஆக குறைக்க பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக தகுதி யில்லாத 111 கல்லூரிகள் இணைப்பு அனுமதி பெற்றுள்ளன. மேலும் இணைப்பு வழங்குவதற்கு அளவு கோல்களான ஆசிரியர் குழு, சோதனை கூடம், நூல கம், மற்றும் பொது வசதிகள் ஆகிய நான்கிற்கும் தனித்தனியே குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை.
இணைப்புகளுக்கான நெறிகளை தளர்த்தியதும், ஒவ்வொரு அளவு கோலுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ண யிக்காததும், இணைப்பு கல்லூரிகள் வழங்கும் கல்வியின் தரத்தை பாதிக்கக் கூடிய செயலாகும். இணைப்பிற்கான நிபந்தனைகளை பல்கலைக்கழகம் விழிப்புடன் இருந்து தீவிரமாக செயல்படுத்தவில்லை. புதிதாக என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்தில் பாடப்பிரிவுகளை தொடங்கும் பொழுதோ, நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ அகில இந்திய தொழில் கல்வி மன்றத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் மிகவும் அவசியம்.
ஆனால், இதன் விதிகளை மீறி என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் கூடுதலாக 42 மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் -மாணவர் விகிதம் 1:38 என்ற அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வலைத்தளம் சார்ந்த தொழில் நுட்ப வள ஆதாரங்களை வழங்குவதற்காக கருத்துரு செய்யப்பட்ட “அறிவுத்தர மையம்” 6 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஆனதுடன் அதற்காக செல வழித்த ரூ.6.16 கோடி வீணானது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:http://www.maalaimalar.com/2011/09/16150253/private-colleges-Anna-Universi.html

Sunday 11 September, 2011

முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்:- கலைஞர் கருணாநிதி

தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளின் மூலம் காவல்துறையினர் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கக்கூடிய எச்சரிக்கை கருவியாகக்கூடும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசின் அத்துமீறலைத் தடுப்பது தொடர்பாக திமுக வழக்குரைஞர்கள் ஆலோசனைகூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது: திமுகவில் வழக்குரைஞர்கள் அணி இருக்கிறதா என்று முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். நெருக்கடி நிலை காலத்தில்கூட யாரும் திமுகவை அடியோடு வீழ்த்திவிட முடியவில்லை.

தினமும் காலை ஏடுகளில் கைது செய்திகளைப் பார்த்து பதற நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் வழி காண வேண்டும். சட்டப் பிரச்னைகளைச் சட்டத்தால் சந்திப்போம் என்று சொல்பவர்கள் நாம். இன்றைக்கும் ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக நம்முடைய வழக்குகளைச் சந்திப்போம்.

காவல்துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும். நமக்கு எதிர்காலத்தில் என்ன கதி ஏற்படுமோ என்று இப்போதே பயப்பட வேண்டும். அதற்கேற்ப தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி நம்மை நோக்கி வருகின்ற துறையினரைக் கேள்விகள் கேட்க வேண்டும். "தகலறிதல்' என்றாலே அவர்கள் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கின்ற ஓர் எச்சரிக்கைக் கருவியாக ஆகக் கூடும். எனவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துங்கள்.

ஏழை கட்சி: அந்தப் பணிக்குப் பணம் செலவழிக்க வேண்டுமே? என்று வழக்குரைஞர்கள் கேட்கலாம். பெரிய பொதுத் தேர்தலைச் சந்தித்துவிட்டு ஆட்சி பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கின்ற கட்சி திமுக என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழுக்குரைஞர்களுக்கு இருப்பதை மனதில் வைத்துக்கொண்டு தலைமைக் கழகத்தை எதிர்பார்க்காதீர்கள்.

அரசுக்கு அச்சம்: வழக்குரைஞர்கள் பெருந்திரளாக கூடியிருப்பதே இந்த அரசை மிரட்டுகின்ற ஒரு செய்தியாகவே நான் கருதுகிறேன் என்றார் கருணாநிதி.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் என்.ஜோதி, தலைமைக்கழக வழக்குரைஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், இ.பரந்தாமன் உள்பட

வழக்குரைஞர்கள் பலர் கூட்டத்தில்

பங்கேற்றனர்.

thanks http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=474788&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

Saturday 3 September, 2011

ஹசாரா கூட்டத்திற்கு கலைஞர் வைத்த ஆப்பு

அரவிந்த் கெஜ்ரவால மத்திய அரசு ,மேல் படிப்புக்கு அனுப்புற மாதிரி தமிழ்நாட்டுலயும் பொதுப் பணித்துறை, பொறியியல்துறை, மருத்துவத்துறையில் வேலை செய்யறவங்களுக்கு முழு சம்பளமும் கொடுத்து மேல்படிப்பு
படிக்க அனுப்பி வைக்கறாங்க. அது ஏன்னாஇந்த மாதிரி மேல் படிப்பு படிக்கறவங்களுக்கு அரசு சலுகை கொடுத்து
உதவி செஞ்சா அவங்க திரும்பி வந்து மக்களுக்குப் பயன் படுற மாதிரி வேலை செய்வாங்க அப்படின்னு நம்பிக்கை

க்ஜ்ரவால் மேட்டரில் பார்த்தா அவர் முழுசா படிப்புக் காலம் முழுவதும் சம்பளம் வாங்கிருக்கார். அதாவது அவர் ஏற்கனவே பார்த்த வேலையில் (ஐ.ஆர்.எஸ்) வாங்கிட்டு இருந்த சம்பளம். திரும்ப வேலைக்குச் சேருகிறார். ஒரு வருஷம் வேலைக்கே போகல. மேலதிகாரிகள் நோ வொர்க், நோ அப்படின்னு அத சான்க்‌ஷன் பண்றாங்க. ஒப்ப்ந்த காலம் முடிஞ்சதும் வேலயை ராசினாமா செய்யறார். ஒப்பந்த காலம் முடியல, நீங்க வேலை செய்யணூம் அப்படிங்கறாங்க. இவரு நான் வேலை செஞ்சிட்டென். நான் வ்ரலேன்னு மேல்திகாரிங்க ஒத்துக்கிட்டாங்க, அப்படின்னா நான் வேலைல்ல இருக்கேன்ன்ன்னுன்னுதான அர்ட்தம் அப்படிங்கறார்.


இவங்களுக்கு சம்பளம் கொடுத்து படிக்க வைச்சதே நாட்டுக்கு வேலை செய்வாங்கன்னுதான். ஆனா இவர் சூப்பர் அல்வாவ தூக்கிக் கொடுட்திருக்கார்.

இதுக்கு அடுத்ததா இவர் விருது வாங்கி அதுக்கு கொடுத்த பணத்த மக்கள் சேவைக்கு அள்ளிக் கொடுத்துட்டேன் அப்படிங்கறார். எந்த மக்களுக்கு கொடுட்திருக்கார் அப்படின்னா இவரே ஆரம்பிச்சு இவரே மெயிண்டன் ப்ன்ற ஒரு கம்பனி அது. பழைய ராஜாக்கள், ஒரு கோயில்கட்டி அதுல ஒரு சிலைய வச்சு, எல்லா நகை வருமாணத்தையும் கோயில்ல காணிக்கை ஆக்கிருவாங்க. உலகமே நினைக்கும் கோயில் பொது சொத்து அப்படின்னு, அந்த ஊர் காரங்க மட்டும் கோயில்தான் ராஜா, அவருக்குத்தான் முதல் மரியாதை. அவர் வெச்சத்துதான் எல்ல்லாம் அப்படி வாழ்வாங்க அப்படித்தான் இது

இதப் பத்தி நியூஸ் போட்டா அரசியல் காழ்ப்புணர்ச்சி அப்படின்னு அவரோட அடிபொடிகள் வந்து கமெண்ட் அள்ளி விடுறாங்க. ஏன் மூனு வருசம் கழிச்சு கேட்கறாங்க அப்படின்னு அளக்கறாங்க. அப்ப இவங்க கொண்டு வரப்போற மசோதாவிலயும் அன்னைக்கே புகார் கொடுத்தாதான் ஒத்துப்பாங்களா?


இப்பக்கூட தமிழ்நாட்டில அரசாங்க சம்பளம் வாங்கிட்டு மேல்படிசிட்டு ஒரு கூட்டம இருக்காங்க. அதில் திறமையான ஆட்களுக்கெல்லாம் தனியார்ல பல லட்சம் அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அரசாங்க நிபந்தனைக்கு பயந்துக் கிட்டு இருக்காங்க. ஆனா கஜ்ரவால் போன மாதிரி தமிழ்நாட்டு ஆட்கள் போக முடியாது கலைஞர் அரசு என்ன பண்ணியிருக்காங்கன்னா, அரசாங்க உதவியோட மேல படிக்க போறியா, நீ ஓய்வு பெரும்வரை தமிழ்நாட்டுக்கு வேலை செய்யணும்னு எழுதி வாங்கிட்டுய்த்தான் படிக்கவே அனுப்பி இருக்காங்க.



நல்ல வேளை தமிழ்நாட்டுல போன அரசாங்கம் இவங்களுக்கு ஒரு ஆப்பு வெச்சுது. இல்லையினா மக்கள் செலவுல படிட்டு தனியா ஒரு மக்கள் சேவை மையம் அமைச்சு அதுக்கு சம்ம்பாதிக்கும் பணத்தை அப்படியே கொடுத்து ம்க்காள் சேவை செய்து உலக அளவில ஃபண்ட் தேர்த்தி சந்தோஷமா மக்கள் சேஎவை செஞ்சு வாழ்ந்திட்டு இருப்பாங்க. இப்பக்கூட கெஜ்ரவால் த்ப்பிச்சிட்டாருன்னா இங்கையும் நெரயாப் பேர் எஸ்கேப் ஆயிடுவாங்க

கடைசிக்கு கைக்காசு போட்டு மெழுகுவர்த்தி வாங்கிப் போராட்டம் பண்ணின அப்பாவிகளுக்கு மெழுகும் மிஞ்சி இருக்காது. திரியும் மிஞ்சி இருக்காது.

thanks

http://www.indiatvnews.com/news/India/Kejriwal_Admits_His_NGO_Took_Money_From_Ford_Foundatio_-10340.html


http://www.tribuneindia.com/2011/20110901/main7.htm


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=306044

Tuesday 30 August, 2011

அதிமுகவினரின் வயிற்றில் பாலை வார்த்த அம்மா

அவ்அம்மா எது செய்தாலும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்யறாங்க. குடியரசுத் தலைவரின் முடிவை மாநில அரசு மறு ஆய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதுங்கறத அழுத்தம் திருத்தமாச் சொல்றாங்க. கவர்னர் மனுவ நிராகரிச்சப்ப கலைஞர்தான் முதல்வர் அப்படிங்கறதயும் சொல்றாங்க. இருந்தாலும் தமிழ் நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுட்து அதுதாங்க தூக்குத் தண்டனை தமிழ் மக்களுக்கு மன வருத்தம் தருதுல்ல அதுனால தூக்குத் தண்டனையை குறைங்க அப்படின்னு தீர்மானம் போட்டு அனுப்பி இருக்காங்க.



பார்ப்போம். மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும் என்ன மாதிரி பதில் கொடுக்கறாங்கன்னு


தகவல் சோனியாஜிக்குப் போய் அவங்க பதில் எழுதி அதுக்கு நாலுபேர்க்கிட்ட பேசி அப்புறம்தான் எழுதுவாங்க, அந்த பதில் மத்திய அரசுக்கு வந்து அப்புறம் அவங்க பதில் சொல்லுவாங்க.


மாநில அரசு தீர்மானம் போட்டா மத்திய அரசு ஒத்துக்கணும்னு வழக்கறிஞர் வைகோ வேற சொல்லிட்டு இருக்கார்.

என்ன சொல்லப்போறாங்களோ

===============================================================

ராஜிவ் காந்தி உயிரோட வந்தா ஆயுள் தண்டனையா குறைக்கலாம்னு இளங்கோவன் சொல்றாரு. அது எப்படி? அவர் எங்க இருக்காரு தகவல் கொடுத்தாலாவது போய் கூட்டிட்டு வரலாம். இல்லை அவர் உயிரோடு வந்தால் இந்த வழக்குத்தான் எதற்கு?

அத வச்சுத்தான் தருமபுரி கட்சிக் காரங்க சந்தோஷப் படுவாங்களா இல்லையா அப்படிங்கறது தெரியும்.


===============================================================================

முதல்வருக்கே அதிகாரம் இருக்குன்னா அப்புறம் எதுக்கு வைக்கோ, நெடுமாறன் எல்லாம் குடியரசுத் தலைவர்கிட்ட கருணை மனுக் கொடுக்க ஐடியா கொடுக்கறாங்க. மேட்டரே இப்படியே ஒரு ஓரமா உட்கார்ந்து முடிச்சிட்டு போயிருக்கலாம்ல

Sunday 28 August, 2011

அம்மா எஸ்கேப் ஆயிடுங்க

தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒரு பிரச்சனையா மூன்று பேர் தூக்குத் தண்டனை பேசப் படுகிறது. நெடுமாறன், வைகோ வெல்லாம் அவங்க தூக்குத் தண்டனையை நிறுத்தனும்ணும் அதுக்கு முதல்வர் தலையிடணும்னு சொல்லிட்டு இருக்காங்க. முதல்வர் தலையிட்டு நிறுத்த முடியும்னா 20 வருஷத்தில சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் ஜெ அம்மாவுக்கு ஒரு தர்ம சங்கடம். தூக்கு வேண்டாம்னா மத்திய அரச பகைச்சிட்ட மாதிரி ஆயிடும். இப்படியே அமைதியா இருந்தா அது தூக்குக்கு ஒத்துகிட்ட மாதிரித்தான். ஈழத் தமிழர்களுக்கு எதிரி அப்படி கெளப்பி விட்டுடுவாங்க.

எனக்கு என்ன தோணுதுன்னா 1991 கொலைவழக்கு இன்னும் முடியல, அதில குற்றம் சாட்டப் பட்ட நிறையப் பேர் செத்துப் போயிட்டாங்க, இருக்கற கொஞ்சப் பேர வச்சுத்தான் அந்த கொலைவழக்கில இருக்கற மத்த ரகசியங்களை வெளியே கொண்டுவர முடியும் அதுனால கொலைவழக்கு முடியவரைக்கும் இவங்கள விசாரணைக்கு இருக்கற மாதிரி பார்த்துக்கறது அவசியம் அந்த வழக்கு முழுசும் முடியற வரைக்கும் நிறுத்தி வைங்கன்னா வடக்கயும் நல்ல பேர் வாங்கிக்கலாம். தெற்கேயும் எஸ்கேப் ஆகிக்கலாம்.

ஜெ அம்மா என்ன ஐடியாவில இருக்காங்களோ யாருக்குத் தெரியும்

அப்துல் கலாம எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க

வலைப் பக்கங்களில் நிறைய எழு்தறவங்க எழுதிக்கிட்டெ இருக்காங்க. நடக்கற நிகழ்ச்சி்களொட அவங்க அவங்க கற்பனையும் ேர்த்து எழுதிக்கிட்டு இருக்காங்க. அன்னா ஹசாராவ ஆதரிக்கறத பத்தி ஒருத்தர் ஒரு இடு்கை எழுதி இருந்தாரு. நம்ம கண்லயும் பட்டது http://vettipaechchu.blogspot.com/2011/08/blog-post.html

அதுல பார்த்தா

/
/நமது தமிழ்நாட்டில் பிறந்து மிகப் பெரும் அறிவாற்றல் பெற்று, எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் ஒரு பெரும் பதவியிலோ அல்லது தானே தனியாக ஒரு தொழிலதிபராகவோ பரிமளித்திருக்கக்கூடிய தகுதி பெற்றும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி அனைத்து இந்தியனும் தலை நிமிர்ந்து நிற்கும்படிக்கு உலக அரங்கிலே இந்தியாவை உயர்த்தியவர்; வலுவான இந்து மதக் கோட்பாட்டையே தனது கட்சியின் செல்வாக்கைப் பெருக்க பிரச்சாரம் செய்து வந்த ஒரு இந்துக் கட்சியே, இஸ்லாமியரான இவரை நாட்டின் மிகப் பெரும் பதவியான இந்திய ஜனாதிபதியாக அமர்த்தி அழகுபார்க்கும் படி உயர்ந்தவர்; குழந்தைகளையே எதிர்கால இந்தியாவாக பாவித்தவர்; சாதி, மதம், கட்சி, கொள்கை என்று இல்லாமல் இந்தியாவைப் பார்த்தவர்; நமது நாட்டைத் தாயாக பாவித்தவர், மாபெரும் மனிதர், இளைஞர், டாக்டர். அப்துல் கலாம் சொன்னாரே, ‘இளைஞர்களே.. கனவு காணுங்கள்..’ என்று..//


அப்படி இப்படின்னு புகழ்ந்து எழுதிட்டு அதுனால நாடு உருப்படணும்ன்னா அன்னா ஹசாராவ ஆதரிங்கன்னு எழு்தி யிருந்தாரு. மேலோட்டமா பார்த்தா அப்துல் கலாம் ஆதரவு பெற்ற வேட்பாளர் அன்னா ஹசாரேவ ஆதரிங்கன்னு ஓட்டுக் கேட்கறமாதிரி எழுதி இருந்தாரு. நானும் எதார்த்தமா பின்னூட்ட்த்தில
ஏனுங்க அபதுல் கலாம் நல்லாத்தான இருக்காரு ஒரு ஃபோனப் போட்டோ நேர்ல போயோ நீங்க ஏனுங்க ஊழலை ஒழிக்கற அன்னாவுக்கு ஆதரவு கொடுக்கலேன்னு ேளுங்கன்னு
கேட்டேன். அவரு வலைப்பூ வேற பின்னூட்ட மட்டறுத்தல் பண்ணி வச்சிருக்கற இடம் அப்படிங்கறதால கொஞ்ச நேரம் கழிச்சு வந்திடும்ன்னு நினைச்சா நம்ம பின்னூட்த்த வெளியிடவே இல்லை.

நீங்க சொல்லுங்க, அப்துல் கலாம் ஃபோட்டோ போட்டு அன்னா ஹசாராவுக்கு ஆதரவு கேட்கற ஆள்கிட்ட நான் கேட்ட்து தப்பா?

அப்துலகலாம் நம்ம ஊர்லயே இருக்கும்போதே அவர் போட்டோ போட்டு அன்னாவுக்கு ஆதரவு தேடுறாரே இது சரியா?

Friday 26 August, 2011

அம்மாடி ஆத்தாடி

அன்னாஹசாரேவின் போராட்டத்துக்குச் செய்யப்படும் செலவுகள் கடந்த முறை செலவு செய்யப்பட்டதைவிட அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். போராட்ட அமைப்பாளர்கள் இவர்களுக்கு போராட்ட விளக்க கையேடுகளையும், சிறிய புத்தகங்களையும் வழங்கி வருகின்றனர்.

மைதானத்துக்குள் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வாடகை தவிர படுக்கைகள், வாகனங்கள் ஆகியவையும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் சாப்பாடு, குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக தினமும் ரூ. 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவில் அமைப்பாளர்களின் செல்போன் கட்டணமும் அடங்கும்.


அன்னாஹசாரே கடந்த ஏப்ரல் மாதம் ஜந்தர்மந்தரில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது மொத்தம் 32.70 இலட்சம் செலவானதாகக் கூறப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர்தான். ஆனால் தற்போதைய போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த முறை உண்ணாவிரதத்தின் செலவு கடந்தமுறையைவிட அதிகமாக இருக்கும்.


ராம்லீலா மைதானத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்ககூடிய உணவு கவுண்டர்களை திறந்துள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் மூலம் வாரத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர டெல்லி மாநகராட்சியின் தொழிலாளர்கள் சங்கமும் ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி உள்ளன.

பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச மருத்துவ சோதனை மையங்களை திறந்துள்ளது. தேவையானவர்களுக்கு முதலுதவி அளிப்பதுடன் மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.


உண்ணாவிரத வளாகத்துக்குள் 6 நடமாடும் கழிவறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேனிலும் 12 கழிவறைகள் உள்ளன. ஆனால் அங்கு கூடும் கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.


இதய சிறப்பு நிபுணர் டாக்டர் நரேஷ் கிரேஹன் நடத்தும் மெடான்டா அதி நவீன ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.


தனியார்கள் தவிர அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையிலும், மேடைக்கு அருகிலும் “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உண்ணாவிரத காட்சியை டெல்லி போலீசார் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.


உண்ணாவிரதம் நடைபெறும் இடம் அருகே வாகனங்கள் வந்து செல்வது அதிகரித்துள்ளதால், ராம்லீலா மைதானம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் விற்பனையாகும் பெட்ரோலின் அளவு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 லிட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.

நன்றி:-http://www.inneram.com/2011082118506/hazares-fast-fuelling-profits-at-this-petrol-pump

அன்னா தான் இனி எல்லாம்

ஊழல் இல்லாத நாட்டில்தான் மக்கள் வாழ முடியும். ஊழலை ஒழிப்பு மசோதா தாக்கல் செய்த பின்புதான் சிங்கப்பூர் மக்கள் வரிக் கட்டாமல் அமைதியாக வாழுகிறார். அங்கு ரோடுகள் பளபளக்கின்றன். மக்கள் நிறைய சம்பாதித்து சந்தோஷமா வாழ்றாங்க. இனி இந்தியாவும் இப்படித்தான். அன்னா ஹசாராவின் போராட்டம் மாபெரும் வெற்றி அப்படின்னு டைம் ஆஃப் இண்டியாவே போட்டுட்டாங்க, இந்தியாவுக்கு டைம் சூப்பர்.

இதையெல்லாம் வாங்கிக் கொடுத்த அன்னா ஹசாராவுக்கு நாம் உரிய கவுரவம் கொடுத்தே ஆகணும். அதுக்கு ஒரே வழி அவரை தேசப் பிதா என்று அறிவிப்பதுதான். ஏன்னா

1. காந்தி தலைமையில் ஒரு கூட்டமே போராடினார்கள். இங்கு அன்னா தனி ஆளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.

2.காந்தி போலவே எந்தக் கட்சியிலும் தேர்தலிலும் நிற்காதவர். அவர் போலவே வேகமாக நடக்கக் கூடிய்வர்.

3.காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரம் ஊழலுக்கு வழிவகுத்தது. அன்னா வாங்கிக் கொடுத்திருக்கும் சுதந்திரம் ஊழல் இல்லாத வரிகட்டத் தேவையில்லாத சுதந்திரம்.

4.காந்தி எந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் நான் இறந்தாலும் சுதந்திரப் போர் நடக்கும் என்றோ சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் நான் சாக மாட்டேன் என்றோ சொன்னதில்லை. அதாவது எப்போதுமே அவர் உயிரைப் பணயம் வைத்ததில்லை. அன்ன்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் சாகமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

5.அன்னாவின் போராட்டாத்திற்கு எல்லா உயிர்களும் கலந்து கொள்கின்றன.

6. காந்தியின் போராட்டத்தில் சக மக்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுத்ததில்லை. ஆனால் அன்னா ஹசாராவின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எந்த சங்கடங்களும் வராமல் பார்த்துக் கொள்ள பல லட்சங்கள் செலவிடப் படுகின்றன.


அதனால் இனிமேல் அன்னா ஹசாரேதான் இனி தேசப் பிதா. அவர்தம் தொண்டர்களை வேண்டுமானால் இனிமேல் பிதா மகன்கள் என்று அழைத்துக் கொள்ளலாம்.

Thursday 25 August, 2011

கேள்விக்கு ஒருவர் இல்லை

அண்ணா ஹசாரே ஆதரவுக் குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கும் அதேநேரத்தில், நாடாளுமன்ற வாசலில் இந்திய மக்களின் உணவைக் கெடுக்காதே என்கிற எதிர்ப்புக்குரலுடன் கிரீன்பீஸ் ஆர்வலர்கள் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்க.ளில் ஒன்றுதான் "இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்' மசோதா

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உழவர் பாதுகாப்பு என்ற பெயரில் திமுக அரசால் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது நினைவு இருக்கலாம். அந்த மசோதாவுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளில் முக்கியமான ஒன்று வேளாண் பயிற்சி தொடர்பானது. விவசாயிகளுக்கு வேளாண் முறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லித்தரும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு அனுமதி பெற்ற நபர் அல்லது நிறுவனம்தான் செய்ய முடியும் என்கிற வகையில், நுட்பமாக வரையறுக்கப்பட்ட அந்த மசோதாவை இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்த்தார்கள்.

÷இப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வைக்கப்போகும் இந்திய உயிரி - தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா, தமிழக அரசு மசோதாவில் இருந்த ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை இன்னும் கடுமையாக, ஆனால் வேறுவிதத்தில் முன்வைக்கிறது. இந்த மசோதாவில் மிகப்பெரும் ஆட்சேபத்துக்குரியதாக இரண்டு பகுதிகளை கிரீன்பீஸ் ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்:

÷""....... உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள் அல்லது தாவரத்தின் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல், மக்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டுசெல்லும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டுவரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் விதிக்கப்படும்.....'' என்கிற இந்த நிபந்தனை மக்களிடம் மரபீனி மாற்றப்பட்ட விதைகள், காய்கனிகள், வேளாண் விளைபொருள்கள் குறித்த தீமைகளைப் பேசுவதையே மறைமுகமாகத் தடைசெய்கிறது.

÷அறிவியல் ஆதாரங்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் மாறுபடுபவை. பன்னாட்டு மென்பானங்களில் நச்சுத்தன்மை உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லும் முடிவுக்கு, "அனுமதிக்கப்படும் அளவு'க்கு உள்ளாகத்தான் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது அரசு. இந்த அனுமதிக்கப்பட்ட அளவு அமெரிக்காவில் ஒரு விதமாகவும், இந்தியாவில் வேறு விதமாகவும் இருக்கிறதே, அது ஏன் என்று கேள்வி கேட்பாரில்லை. இப்போதுள்ள கருத்துரிமைப்படி ஒரு வேளாண் பொருளில் நச்சுக்கலப்பு உள்ளது என்று சொல்வதற்காவது உரிமை உள்ளது. அதனை முற்றிலுமாக இந்த மசோதா பறித்துவிடும். மரபீனி மாற்றப்பட்ட உற்பத்திப் பொருள்களால் விளையும் எல்லா தீமைகளும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறது என்பதாக அரசு சொல்லும்போது, இதைப்பற்றி பேசுவதே தண்டனைக்குரியது. அப்படியானால், எப்படி மக்களிடம் இதைக் கொண்டுசெல்வது? தவறுகளைத் தட்டிக் கேட்கக் கூடாதா? மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாதா? வல்லான் வகுத்ததுதான் சட்டமா?

÷""......அரசு அனுமதித்துள்ள தாவரம் அல்லது உயிரி - தொழில்நுட்பம் சார்ந்த பொருளை அனுமதியின்றி பரிசோதனைக்கு உள்படுத்துவது (கிளீனிக்கல் டிரையல்) தண்டனைக்குரியது. இக்குற்றத்தைச் செய்பவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் தண்டனையாக விதிக்கப்படும்.....'' என்கிற நிபந்தனைகள், யாருக்காக, யாரைத் திருப்திப்படுத்த அல்லது பாதுகாக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை.

அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் இந்தப் பொருள்களைத் தனியார் அமைப்புகளும் இயற்கை ஆர்வலர்களும் பரிசோதிக்க முடியும். ஒரு விளைபொருளை அல்லது உயிரிப் பொருளைப் பரிசோதிக்கவும் அரசின் அனுமதி பெற வேண்டும் என்றால், இந்தியாவில் மக்களாட்சிதான் நடக்கிறதா என்கிற சந்தேகமல்லவா எழுகிறது. இவர்கள் தொழுதடிமை செய்து வணங்கும் அமெரிக்கத் திருநாட்டில் இப்படி எல்லாம் தடை இல்லையே. அங்கே தரப்படும் சுதந்திரமும் உரிமையும் இங்கே மட்டும் தட்டிப் பறிக்கப்படுகிறதே, ஏன்?

÷மசோதாவின் இத்தகைய பிரிவுகள் முழுக்கமுழுக்க, மரபீனி மாற்றுப்பயிர்களில் (ஜி.எம். புராடக்ட்ஸ்) ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலால் செருகப்பட்ட நிபந்தனைகள்தான் இவையெல்லாம் என்பதுதான் போராட்டம் நடத்தும் இயற்கை ஆர்வலர்களின் கருத்து. ஆனால், இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தாகிவிட்டது. இப்போது, அண்ணா ஹசாரே விவகாரத்தால் மக்களின் மனமும், ஊடகங்களின் கவனமும் வேறுதிசையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் சந்தடி சாக்கில் விவாதம் இல்லாமலேயே இந்த மசோதா நிறைவேறும் அபாயம் நிறையவே இருக்கிறது. இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடுகிறது என்பதுடன் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் துறை தலையிட முடியாததாகவும் உள்ளது.

÷ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி உற்பத்தியில் மரபீனி விதைகள் இந்திய மண்ணில் வேரூன்றிவிட்டன. 2009-10-ம் நிதியாண்டில் 2.43 லட்சம் குவிண்டால் பி.ட்டி. பருத்தி சந்தைக்கு வந்தது, 2010-11-ம் நிதியாண்டில் 2.60 லட்சம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது. இப்போது வடமாநிலங்களில் பி.ட்டி மக்காச்சோளம் விதைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன மரபீனி மாற்றுப்பயிர் நிறுவனங்கள். பி.ட்டி. கத்திரிக்காய் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் பிரச்னையைப் பற்றி அண்ணா ஹசாரேயிடம் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் அவரைச் சுற்றி யாரும் இல்லையே, என்ன செய்வது? விவசாயியான அவரிடம் எடுத்துச் சொன்னால் ஒருவேளை "லோக்பால்' மசோதாவைக் கைவிட்டுவிட்டு இதற்கு முன்னுரிமை கொடுத்தாலும் வியப்பில்லை.


thankshttp://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=466236&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Wednesday 24 August, 2011

இரண்டாம் சுதந்திரம் இரண்டுநாளில் வந்து விடும்

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா பயனித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இரண்டாவது சுதந்திரம் நமக்குக் கிடைத்து விடும், அன்னா ஹசாரா மற்றும் இரண்டு பூசன்கள் அவர்தம் நண்கள் லோக்பால் அமல்படுத்தி விடுவார்கள். இனிமேல் அனைத்து அரசு அலுவகங்கள், அமைச்சர்கள் அனைவரும் அடங்கி நடந்தாக வேண்டும் . லஞ்சம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் இனி இவர்கள் அடக்கி விடுவார்கள். சுப்ரீம் கோர்ட்க்கு போறேன்னு யாரும் சொல்ல முடியாது. மக்கள் மெழுகுசிந்தி வாங்கிய இரண்டாம் சுதந்திரத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. கவர்மெண்ட்டும் சரி, கவர்மெண்ட் டுல வேலை செய்யரவங்களும் சரி. இனி மக்களுக்கு அடங்கித்தான் ஆகணும். இனிமேல் கவர்மெண்ட் மாப்பிள்ளைக்குத்தான் பொண்ணுக் கொடுப்பேன் எவனும் சொல்ல மாட்.டான்.



இதெல்லாம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு.

அப்புறம் இவர்களே அடுத்தல் லோக்பால் கட்டப் பஞ்சாயத்து ஆட்களை நியமித்துக் கொள்வார்கள். நாட்டாமை தம்பி, அடுத்த நாட்டாமை ஆகிவிடுவார். பாவம் அண்ணா ஹசாரா நாட்டாமையோட தம்பிகள் எல்லோரும் அவரது தம்பியாகி விடுவார்கள். ரூபாய் நோட்டுல வாழுறாரு அண்ணா, எல்லோரும் சொன்னா அப்படின்னு அவர் பேர்ருல ஒரு பாட்ட போட்றுவாங்க.

நாட்டில் உள்ள ஐ.ஜி, ஐ.ஏ.எஸ் ஆட்கள் எல்லோரும் புது நாட்டாமைகளுக்கு பயந்து தான் வாழ்வாங்க. ஏன்னா அவங்கதான் சூப்பர் கோர்ட், அவங்க தண்டனையும் கடுமையா இருக்கும். ஒரு பெட்டிசன் போயாச்சு, அதை அவங்க பார்த்து தீர்ர்புக் கொடுத்தா மனோரமாகூட வந்து நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு சொல்ல முடியாது. அதுனால எல்லோருமே அவங்களுக்கு பயந்துதா இருப்பாங்க.

அதுல ஒண்ணு ரெண்டு பேர அப்ப இருக்கற பெரிய பெர்ரிய மஃபியா குரூப் மக்கள் மிரட்டியோ, பண ஆசை காட்டியோ அவங்க கைக்குள்ள கொண்டுவந்திருவாங்க. புள்ளைய கடத்தி வச்சிக்க்ட்டு மிரட்டினா என்ன பண்றது? பிடிக்காத கலெக்டர், ஐஜிய எல்லாம் ஊழல் பண்ணீட்டாங்கன்னு டிஸ்மிஸ் பண்ண சொல்வாங்க. பெட்டிசனையும் இவங்க்ளே போட்டுடுவாங்க. அப்புறம் என்ன நல்லவன் எல்லாம் உள்ள போய்டுவான். மஃபியா குரூப்புக்கு கப்பம் கட்டுறவன் மட்டும்தான் பதவில இருக்க முடியும். கப்பம் கட்டுறவன் அத வசூல் பண்ண ஆரம்பிப்பான். அத அதுக்கு கரப்சன், ஊழல் இப்படியெல்லாம் யாராவது பேர வச்சா ஒரு பெட்டிசன், ஒரு என்கொயரி, அப்படியே கட்டம் கட்டி தூக்கி போட வேண்டியதுதான்.

இந்த நேரத்தில் இன்னொரு அன்னா ஹசாரா (இந்த இடத்தில் இன்னொரு காந்தின்னு சொல்லக் கூடாது, ஏன்னா அவர் வாங்கிக் கொடுத்தது குவாட்டர் சுதந்திரம்) வந்து மெழுவர்த்தி மாதிரி போராட்டம் பண்ணா ஆரம்பிச்சாங்கன்னு வையிங்க, அவர் மேல்யும் ஒரு க்ஞ்சா கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவ்வாங்க. இன்ஸ்பெக்டர் மாட்டேன்னு சொன்னா அவர் மேல் கரப்சன் கேஸ் போட்டு அவரை தூக்கிடுவாங்க. பேப்பர் , மீடியா அப்படி யாராவது போன அதை எதிர்க்க அவங்களே பேட்டா டிவி, பேட்டா பேப்பர், பேட்டி இண்டர்நெட் இப்படி ஏதாவது வச்சு நீயூஸ் வராம ஒரே ஒரு அமுக்கு. மொத்தத்திலே வர்ர் செய்திகள் எல்லாம் இந்த் நாட்டு மக்கள் சுதந்திரமாக லஞ்சம் இல்லாமல் வாழ்கிறார்கள். நேர்ர்மையாக வாழ்கிறார்கள் இப்படியே சொல்லிட்டு போகும்.

டிஸ்கி: மஃபியா கும்பலுக்குத்தான் சம்பாதிக்கும் ஆசை வரணும்னு இல்லை, யார்ய்க்கு வேணும்னாலும் வரலாம். எப்ப வேணும்னாலும் வரலாம்.

Sunday 21 August, 2011

அன்னா ஹசாராவும் கூட்டல் கணக்கும்

நாட்ல என்ன நடக்குதுண்ணேபுரியல, ஓட்டுப்போட வர மாட்ேன்னு சொன்ன பசங்க எல்லாம் ஆளுக்கு ஒரு மெழுவர்த்திய தூக்கி வச்சிக்கிட்டுப்போராட்டம் பண்ேன்னு சொல்றாங்க, அன்னா ஹசாரா அமெரிக்கா ஆளு, இல்ல பி ஜெ பி ஆளு அப்படி இப்படின்னு ஜல்லி அடிக்கற ஆளுங்களுக்கு இருக்காங்க.

நானும் இதப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அன்னா ஹசாரா வளர்ந்தா கண்டிப்பாக காங்கிரசுக்கு கட்சிக்கு கஷ்டம்தான். அடுத்த பிரதமாரா சோனியாோ , ராகுோ வருவ்து கஷ்டம். மன்மோகனும் பதவிபிரமானம் எடுக்கறது கஷ்டம். அப்ப காங்கிரசுக்கு ஆப்புத்தானா அப்படின்னு நினைச்சா, அன்னா ஹசாரா வராட்டியும் காங்கிரஸ் கட்சி படுோல்வி அடையத்தான் போகுது . அப்பா அன்னா ஹசாரா வந்தா டெபாஸிட் கூட கிடைக்காதா அப்படின்னு யோ சிச்சா, அப்படி எல்லாம் இல்லை. நம்ம ஊர்ல மெழுவர்த்தி குருப் பசங்க ேஸ்புக்ல போட்டோ போடத்தான் இதெல்லாம் பண்றாய்ங்க. வேற ஒண்ணும் ஆயிடப் போவதில்லை.


ஆனா பாருங்க, காங்கரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே அன்னா ஹசாரா பக்கம் போய் விடும்ல. அப்ப மத்த கட்சிகள்ளாம் கோரஸ் பாட போய்விட வேண்டியதுதான? அப்ப நாளைக்கு நாட்ல ரெண்டு கட்சிதான் இருக்கும். சோனியா காந்தி கட்சி, இன்னொன்னு அன்னா காந்தி கட்சி,

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு கரெக்ட்டாதான் வருது


எளியவன் புரியல அப்படின்னு சொல்றாரு, நான் என்ன சொல்றேன்னா, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு அப்ப்டியே பிஜேபி பக்க ம் போயிட கூடாது அப்படிங்கறதுக்காக அன்னா ஹசாராவ காங்கிரஸே கிளப்பி விட்டு இருக்காதான்னு கேட்கிறேன். அப்ப நாளைக்கு பிஜேபி ஒண்ணுமே பண்ணலேன்னு ஆயிடும்ல, நாளைக்கு எலெக்ஸன்னு வந்தா காங்கிரஸ்தானே ஆட்சியப் பிடிக்கும்.


இண்ட்லில சேர்த்தாச்சு, ஆனா ஓட்டு எண்ணிக்கை கீழே தெரிய மாட்டாங்குது. ஓட்டு போட நினைக்கறவங்க கிளிக் பண்ணினா ஓட்டு சேர்ந்திடும்.

சூடான பகுதில சேர்த்த தமிழ்வெளிக்கு நன்றி

Thursday 18 August, 2011

மண்ணுக்குள் இருக்கும் பெருச்சாளி, மண்ணை ஆளுமா?

http://www.vikatan.com/news/images/muthu1(4).jpgஇந்த கேலிச் சித்திரத்தைப் பார்த்த உடன் தோன்றும் சில உண்மைகள்.

1. படத்தில் இருக்கும் மனிதருக்கு சில பெருச்சாளிகள் தொந்தரவு கொடுக்கின்றன.

2.பந்தலைப் பார்த்தால் அந்த பெருச்சாளிகள் உண்ணாவிரதம் இருக்கின்றன.

3.அதில் ஒரு பெருச்சாளி மிகக் கடுமையாக தொந்தரவு கொடுக்கிறது

4.பூனை வந்து சேர்ந்தால் மட்டுமே இந்த பெருச்சாளிகளை கட்டுப் படுத்த முடியும்.

5.பெருச்சாளிகளின் குணம் அது இருக்கும் இடத்தையும், அங்குள்ள பொருட்களையும், விளைச்சலையும் தனியே எடுத்துப் போய் அனுபவிக்கும் குண்ம உடையவை.

Monday 27 June, 2011

பெட்ரோல் விலை குறைய வழி

பெட்ரோல் விலை, கேஸ் விலை உயர்வைக் கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். அதுவும் காமெடி தர்பாராக

ஒன்று சிலிண்டரை தூக்கிப் போட்டுவிட்டு விறகு அடுப்பில் வைத்து சமைப்பது, பெட்ரோல் வண்டிக்குப் பதிலாக மாட்டு வண்டியைப் போட்டு ஓட்டுவது.

இந்த மாதிரி உருப்படவே செய்யாத போராட்டங்கள் நடத்தினால் ஆட்சியாளர்களுக்குத்தான் உறைக்குமா? பெட்ரோல் அதிபர்கள்தான் பரிதாபப் படுவார்களா?

விலை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மக்களின் உண்மை நிலையை எடுத்து உறைக்கும் வண்ணம் போராட்டங்கள் இருக்க வேண்டும். அனுதினமும் மக்கள் எளிமையாக தொடர்ந்து அமையும் வகையில் போராட்டம் இருந்தால்தான் இந்த நாடு உருப்படும்.

Sunday 26 June, 2011

தணிக்கை

அனைவருக்கும் கல்வி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களையும் தணிக்கை செய்ய விருப்பம் தெரிவித்து தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் தூசிபடிந்து கிடக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வளவு காலமாக இந்த இரு முக்கிய திட்டங்களின் செலவினங்களும் தணிக்கையின்கீழ் வரவில்லை என்பதே புதிய தகவல். இந்தக் கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கிடப்பில் போட்டிருப்பது என்பது அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி.
அண்மையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்தது, தனியாருக்காக செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை வெளிக்கொணர்ந்தது இவை எல்லாமும் சி.ஏ.ஜி. மூலம்தான் அம்பலத்துக்கு வந்தன. ஆண்டுக்கு ரூ.80,000 கோடி வரை செலவிடப்படும் அனைவருக்கும் கல்வி மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அவர்கள் தணிக்கை நடத்தினால், மிகப்பெரிய ஊழல்கள் அம்பலத்துக்கு வரக்கூடும் என்பதால்தான் மத்திய அரசு தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே செண்பக அணை கட்டப்பட்டது.
இதில் 7 நீர்போக்கிகள் இருப்பதாகக் கணக்கு எழுதப்பட்டு செலவும் எழுதப்பட்டது. ஆனால், கட்டப்பட்டவை வெறும் 4 நீர்போக்கிகள் மட்டுமே.
இத் திட்டச் செலவைத் தணிக்கை செய்த மத்திய தணிக்கைத் துறையின் (அக்கவுண்டெண்ட் ஜெனரல் அலுவலகம்) நேர்மையான அதிகாரி, இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதைத் தனது அறிக்கையில் பதிவுசெய்தது மட்டுமல்ல, அந்த அணையை நேரில் ஆய்வுசெய்து, புகைப்படம் எடுத்து, நான்கு நீர்ப்போக்கிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்பதைச் சான்றாதாரமாக இணைத்தார். விளைவு? நான்கு பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இவ்வாறு கணக்கு எழுதச்சொன்ன அரசியல்வாதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக பொதுப்பணித்துறையில் ஒரு உள்தணிக்கைப் பிரிவு உள்ளது. இந்தத் திட்ட நிதிக்குத் தரப்படும் ஒதுக்கீட்டை இவர்கள்தான் கண்காணிக்கிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை. பாவம், உடந்தையாக இருந்து மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்
கீழ்ப்படிந்து
நடந்த நான்கு பொறியாளர்கள் மட்டுமே மாட்டிக்கொண்டார்கள்.

தமிழக உள்ளாட்சித் தணிக்கையில் ஏன் இது கவனம் பெறவில்லை என்றால் இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, மத்திய தணிக்கைத் துறை அலுவலத்தின் தணிக்கை அதிகாரி எந்தவொரு திட்டப் பணியையும் நேரில் சென்று ஆய்வு நடத்த அதிகாரம் பெற்றுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையின் கணக்கையும் தணிக்கை செய்யும் தமிழ்நாடு உள்ளாட்சித் தணிக்கைப் பிரிவு அதிகாரிகளுக்கு நேரில் போய் பார்க்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ரசீதுகளை ஒப்பிட்டு, கணக்கைச் சரிபார்ப்பதோடு சரி என்பதுதான்.

நகராட்சிகளிலும் பஞ்சாயத்துகளிலும் புதியதாக சாலை அமைக்கப்பட்டதாக நிறைய ரசீதுகள் வரும்.
அதை ரசீதுப்படி டிக் செய்யும் வேலையை மட்டுமே தமிழ்நாடு உள்ளாட்சி தணிக்கைத் துறை செய்ய முடிகிறதே தவிர, உண்மையிலேயே இந்தச் சாலை போடப்பட்டுள்ளதா என்று போய் நேரில் ஆய்வுசெய்ய முடியாது.
அதேபோன்று, சத்துணவுத் திட்ட ஆய்வுகளில் கூட வெறுமனே மூட்டைகள் இருக்கிறதா என்கிற ஆய்வோடு முடித்துக்கொள்ளத்தான் அதிகாரம் உள்ளது.

வேளாண் விரிவாக்க மையத்துக்கு மத்திய அரசின் மூலம் அளிக்கப்படும் மானியம் கோடி கோடியாய் வருகிறது. அவை உண்மையாகவே பயனாளிக்குக் கிடைத்ததா என்பதை தமிழகத்தின் உள்ளாட்சித் தணிக்கைத் துறை பயனாளிகளை நேரில் போய் பார்த்து, கள ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கு அனுப்பப்படும் ஆவணங்களையும், ரசீதுகளையும், சான்றுகளையும் பார்த்துத் தணிக்கை நடத்த வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேரில் ஆய்வு செய்யவும், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் தாங்களே அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவும் அதிகாரம் வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலவலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ரசீதுகளில் குளறுபடி தெரியவந்து, மொத்த கோப்புகளையும் கொண்டு வந்து வைக்கும்படி சொன்னால், குறிப்பிட்ட அலுவலர் சில மாதங்களுக்கு விடுமுறையில் போய்விடுவார். அந்தக் கோப்புகள் வரவே வராது. ஆய்வு முடியும் வரை அவர் விடுப்பில் இருக்கிறார் என்றே காரணம் சொல்வார்கள்.
கோப்புகளைப் பார்க்க முடியவில்லை என்று தணிக்கையில் பதிவு செய்ய முடியுமே தவிர, அந்தக் கோப்புகளைத் தராமல் ஏமாற்றிய அந்த அலுவலகத்தின் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கோர முடியாது.

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் மிகப்பெரும் மோசடிகள் நடந்துள்ளன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தலைமைக் கணக்கு தணிக்கையாளருக்கு இந்த அதிகாரத்தை வழங்கினால், அவர்கள் வந்து ஆய்வு செய்தால், செண்பக அணையில் சிக்கியதுபோல எத்தனை அலுவலர்கள் சிக்குவார்களோ தெரியாது.

திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடிக் கொண்டேதான் இருக்கும் என்பதற்காக அதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய கூட்டம் மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது. பல தவறுகளைத் தடுக்க முடியாவிட்டாலும் தவறு செய்தவர்களை அவ்வப்போது இனம் கண்டு தண்டிக்க முடிந்தால் தவறுகள் குறைய அது காரணமாக அமையும்.

நன்றி http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=436779&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B...?

Friday 24 June, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.

""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்''
என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது.
இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை.
இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?

நன்றிhttp://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=432267&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%202%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF...!

Wednesday 22 June, 2011

வளர்ச்சி நிதியா, விரய நிதியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென தனியாக தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது என்பதே தவறு என்பதுதான் நமது கருத்து. மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பது சட்டம் இயற்றலும், மக்கள் பிரச்னைகளையும் தங்களது தொகுதியைப் பாதிக்கும் பிரச்னைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதுதான். தொகுதியின் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களது வேலையை மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்ளும்போது கடமையும் நிதியும் திசை மாறுகிறது. இரட்டை வேலையாக மாறிப்போகிறது. ஆனால், இந்த நடைமுறையை நம்மால் மாற்றிவிட முடியாது என்கிற நிலையில், இதில் முறைகேடு இல்லாமலும், மக்களுக்கு உண்மையாகவே பயன்படும் வகையிலும் இத்திட்ட நிதி ஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதுதான் நமது கருத்து.

ஆண்டுதோறும் ரூ.5 கோடி வீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி, சுமார் ரூ. 4,000 கோடி முறையாகச் செலவிடப்படுகிறதா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவிக்காலமான 5 ஆண்டுகளில் ரூ.25 கோடி ஒதுக்கீடு பெறவும், அவர் விருப்பம்போல திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளவும் முடியும் என்கிறபோது, இத்திட்டம் மக்கள் விருப்பமாக இருக்கவேண்டுமே தவிர, எம்எல்ஏ அல்லது எம்பியின் சொந்த விருப்பத்துக்காக, சுய விளம்பரத்துக்காகச் செய்யும் செலவுகளாக அமைந்துவிடக்கூடாது.

மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் திட்டங்களை ஆட்சியரும் அதிகாரிகளும் அனுமதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்ற நிலையை மாற்றவும், எந்தெந்தத் திட்டங்களை மட்டும் இத்திட்டத்தில் நிறைவேற்ற முடியும் என்கிற கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகிறது.

தனது பெயரை விளம்பரப்படுத்தும்விதமாக சாலையில் நிழற்குடை கட்டப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், நூறு மீட்டர் தள்ளி புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதைக் காணும்போது, நம் கண்ணெதிரில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுவதைத் தவிர, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, இப்படி ஓராண்டுக்குள் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழும் என்று தெரிந்தால், அதிகாரிகள் இத்தகைய நிழற்குடையை இடம்பெயர்க்க தக்க வடிவமைப்பில் அமைக்கத்தான் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதைப்பற்றி யோசிக்கவும்கூட, உண்மையை அறிந்துகொள்ளவும்கூட நேரமில்லாமல் மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு வழங்கும் திட்டச்செலவு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆக,
இதுநாள் வரை இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் திட்டநிதிஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அரசுப் பணத்தை எதற்காக இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்குச் செலவிட வேண்டும்?
ரூ.50 லட்சம் என வரையறை செய்வதைவிட இதை முற்றிலுமாக நீக்குவது என்பதே நியாயம்.

ஒரு எம்எல்ஏ, எம்பி என்பவர் தனது தொகுதிக்காக என்ன நன்மை செய்தார் என்பதை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை நம்மிடம் இல்லை. இவர்கள் கட்டித் தரும் கட்டடங்கள் அவர்கள் காலத்திலேயே இடிந்து விழுமெனில் அதன் தரம் குறைந்த கட்டுமானத்துக்காக அவரையும் பொறுப்பேற்கச் செய்யும் விதிமுறைகள் இந்தத் திட்டத்தில் இல்லை. ஆகவே, முறைகேடுகளுக்கு அதிக இடம் அளிப்பதாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடர்கிறது.

இரண்டு லட்சத்துக்கும் குறைவான திட்ட மதிப்பீடு இருப்பின் முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்படும் என்கிற புதியநடைமுறை, அவசியமற்ற சிறுசிறு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும்
. தொகுதிக்கு வெளியே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஏதாவது ஒரு திட்டத்துக்குச் செலவிடலாம் என்பதும் கண்ணுக்குத் தெரியாத இடத்தில், திட்டத்தைச் செய்ததாகச் சொல்லி பொய்யாகக் கணக்கெழுதவே உதவும்.

ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி வரை செலவிடப்படுவதால், இதில் பாதித் தொகையையாவது தேசிய அளவிலான ஒரு பொதுத்திட்டத்தை வரையறுத்து அதைச் செய்வதற்காக ஒதுக்கீடு செய்தால் மக்களுக்குப் பயன் தருவதாக அமையும்.

உதாரணமாக, 2011-12-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்காகக் கழிப்பறை வசதி, சுத்திகரிப்பு கருவி பொருத்திய தூய்மைக் குடிநீர் வழங்கல் ஆகிய திட்டத்துக்காக மட்டுமே 50 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும், இத்தகைய ஏதேனும் ஒரு பொதுத்திட்டத்துக்குப் பாதி நிதியை ஒதுக்கவும், இதற்காக இடங்களைத் தீர்மானிப்பதில் மட்டுமே எம்பிக்களுக்கு விருப்புரிமை வழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது நாடு தழுவிய ஒரு திட்டம் எம்எல்ஏ அல்லது எம்பியின் நேரடிக் கண்காணிப்பில் முறையாக நிறைவேற்றப்படும்.

மீதமுள்ள 50 விழுக்காடு தொகையை, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்பு நாளில் கிடைக்கும் மனுக்களில் சொல்லப்படும் மக்கள் தேவைகளில், அரசால் உடனடியாகச் செய்ய இயலாத நிலையில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ளப் பரிசீலிக்கலாம்.

இத்தகைய கட்டுப்பாடுகள், இத்திட்டம் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பமாக இல்லாமல் மக்களின் தேவை கருதிய விருப்பமாக இருக்கும். மக்கள் பணம் மக்களுக்கு முறையாகச் செலவிடப்படும்.

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவது தடுக்கப்பட்டு ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது குறிக்கோள் இல்லாமல் வாரி வழங்கப்படும் "எம்பிக்கள் வளர்ச்சிநிதி' என்பதாகத்தான் இருக்கும்.

நன்றி:-http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=435222&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Tuesday 21 June, 2011

எம்ஜியாரின் கொடி சமச்சீர் பாடப் புத்தக்த்தில்

இன்றைய செய்தி ஒன்றைப் படித்த போது உருண்டு புரண்டு சிரிக்க வேண்டும் போல இருக்கிறது. ஆறாம் வகுப்பு பாடப் புத்தக்த்தில் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=261263 அறிவியல் பாடத்தில் 81ம் பக்கத்தில் சட்ட காந்தம் படம் போடப் பட்டுள்ளதாம். அது கருப்பு சிவப்பு வண்ணத்தில் இடம் பெற்றிருப்பதால் அதை ஸ்டிக்கர் ஒட்டி அழிக்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாம். என்ன கொடுமை சார் இது?

கருப்பு, சிவப்பு வண்ணக்கலவை என்பது திமுகவுக்கு மட்டும் என்பது போல சென்ற முறை வகுத்தவர்கள் அதை திணித்ததுபோலவும், இந்த ஆட்சி மறைத்தது போலவும் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் யாரும் அ இ அதிமுக கட்சியின் கொடியை பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவர்க்ளது கொடி இன்னும் கருப்பு சிவப்பு வண்ணத்தில்தான் இருக்கும். நடுவில் அண்ணாவின் படம் தாங்கி நிற்கும்.

இப்படி கழகங்களுக்கு பொதுவான ஒரு வண்ணத்தை அழிப்பதால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

Monday 20 June, 2011

கனிமொழிக்கு இழைக்கப் படும் அநீதி

கனிமொழி அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவரை சிறையில் அடைக்கவேண்டிய அவசியல் என்று கேட்டால் எதுவும் இல்லை. கலைஞர் டிவி வாங்கப் பட்ட பணம் லஞ்சப் பணம் என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. இருந்து விட்டுப் போகப் பட்டும்.

குற்றத்தை உறுதி படுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. ஆனால் விசாரணைக்காக வைத்திருக்கிறார்களாம். சிபிஐ கூப்பிட்ட போதெல்லாம் விசாரணைக்காக் வந்திருக்கிறார். இனியும் வருவேன் என்று உறுதி கூறுகிறார்.


வெளியில் விட்டால் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். கனிமொழியின் மேல் அக்கறை உள்ள யாருமே வெளியே இல்லாதமாதிரியும் அவர் வந்து தான் சாட்சிகளை கலைக்க வேண்டி வரும் என்றும் சொல்வது எந்த வகையில் சேர்த்தி!

2ஜி வழக்கில் இவரது பங்கு இங்கு மட்டும்தான் இருப்பதாகச் சொல்லும் சிபிஐ உறுதி செய்து தண்டனை வாங்கிக் கொடுப்பதை விட்டுவிட்டு ஏன் உள்ளேயே வைத்திருக்க வேண்டும்?

கனிமொழி வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கை விட்டு வெளியே வந்தபோது கனிமொழியை ஜாமீனில் வெளிவிடச் சொல்லி பெரிய இடத்து பிரஷ்ஷர் வந்ததால்தான் அவர்கள் ஒதுங்கினர் என்று சொல்லும் மனிதர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். கனிமொழியை வெளியெவிடக் கூடாது என்று சிலர் வற்புறுத்தியதால் மனம் இடம் கொடுக்காமல் விலகி இருக்கலாம் என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள்.

கலைஞர் மேலும் கனிமொழி மேலும் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கோபம் இருந்துவிட்டு போகட்டும். கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருப்பது ஏன் என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு ஒரே பதில்தான் தோன்றும். கலைஞரை, திமுக வை மிரட்ட, ஏன் மிரட்டவேண்டும்? பொதுவாக திராவிட மக்கள் என்றாலே காங்கிரசுக்கு ஒரு காட்டமான பார்வை இருக்கும்.


இது இல்லாமல் இன்றொன்றையும் கேளுங்கள். இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசில் முக்கிய முடிவுகள், டெண்டர்கள் காபினெட் அனுமதி இல்லாமல், பிரதமருக்குத் தகவல் தெரியாமல், முக்கியமாக அவர்களின் வழிகாட்டி சோனியாவுக்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா? ஒரு கக்கூஸ் காண்டிராக்ட் விடவே அந்தப் பகுதியில் உள்ள அனைத்து பெரும்புள்ளிகளும் தலையிடும்போது இந்த 2ஜி ஒதுக்கீடு இவர்களுக்கெல்லாம் தெரியாமல் போனதா? இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்க வேண்டியதுதானே? சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என்ற வாதத்தை வைக்க வேண்டியதுதானே?


Sunday 19 June, 2011

கிழிக்கறாங்க (அரசாங்க சம்பளத்துடன்)

http://img.dinamalar.com/data/uploads/WR_930868.jpeg


அப்படித்தான்



Saturday 18 June, 2011

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கலைஞர் பாராட்டு

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரகள் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடித்ததில்

தி.மு.க., ஆட்சியில், 2006ம் ஆண்டு, 3,136 கோடி ரூபாய் மதிப்பில், எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலம், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கும். மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கும்.


வடசென்னை அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2,475 கோடி ரூபாய் மதிப்பில், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி, வரும் செப்டம்பர் மாதம் துவங்கும். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு திட்டங்கள் 8,362 கோடி ரூபாய் மதிப்பில், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஒரு திட்டம், 2013ம் ஆண்டு மார்ச் மாதம், மற்றொரு திட்டம், செப்டம்பர் மாதம் உற்பத்தியை துவக்க உள்ளது.


கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 1,126 கோடி ரூபாய் முதலீட்டில், 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2009ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி இம்மாதம் துவங்க உள்ளது. என்று கூறியுள்ளார்.


இந்த திட்டங்களின் பலனாகத்தான் அதிமுக ஆட்சியாளர்கள் மின்வெட்டை நீக்க முடியும் என்று சொல்லுகிறார்கள். எப்படியோ மின்வெட்டு நீங்கினால் மகிழ்ச்சிதான் என்று சொல்லியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


திமுக ஆட்சியில் மேற்கொண்ட இத்தனை திட்டங்களை அதிமுக ஆட்சியாளர் தொடர்ந்து சிற்பபுற நடத்துவதை கலைஞர் அவர்களே கடிதம் மூலம் பாராட்டியிருப்பது மக்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை உருவாக்கிருக்கிறத


மேலும் விவரஙக்ளுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=259456

திராவிடம் என்பது தூய சமஸ்க்ருத சொல்

திராவிடம் என்பது தூய சமஸ்க்ருத சொல். (நேத்ரம் + ராவி + இடம்) = நேத்ராவிடம் என்பது மருவி திராவிடம் என்றாகியது. நேத்ரம் என்றால் புனிதமானது என்று பொருள். ராவி என்பது ரவி அதாவது சூரியனை குறிக்கும். இதன் முழுமையான பொருள் சூரியனை(ரவி) போன்ற புனிதமான இடம் என்று ராவி ஆற்றங்கரை பகுதிகளை குறிக்கும்.

திராவிடம் என்பது பகுதியின் பெயர். இன்றைய ஹிமாச்சல் மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ராவி ஆற்றங்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களின் பகுதியை குறிப்பதுஇந்த பகுதிகளில் வாழ்தவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர்.


இவர்கள் சிந்து வெளி நாகரீக மக்களோடு தொடர்பு கொண்டவர்கள். தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணபடுபவர்கள் போர் முறையில் சிறந்த ஆரிய மக்கள் எனப்படும் அர்மீனிய மக்கள். இவர்கள்தான் பிற காலத்தில் தங்களை தொழில் முறையில் பிரித்து கொண்டு வர்ண பேதத்தை தங்களுக்குள் உருவாக்கி கொண்டவர்கள். தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பாலான சாதிகள் இந்த ஆர்மினிய (ஆரிய) வட்டத்துக்குள் வருபவர்கள். அறிவியல் முறைப்படி(molecular genetics) படி எல்லா சாதிகளும் ஒன்றுதான் என்பதும் உண்மையாகி விட்டது . மற்றபடி திராவிடன் ஆரியன் என்றெல்லாம் பிரித்து பார்ப்பது முட்டாள்தனமான பழமைத்தனமான கருத்து. (கொசுறு: கழகம் என்பதும் தூய்மையான பிராமி சொல். கழகம் என்பது சேவைகளை செய்யும் அமைப்பு. அற பணிகளை செய்யும் அமைப்பு என்பது பொருள்.) தமிழ் என்றால் பிராமியில் சூரியன் என்று பொருள்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=259450 தென்பட்ட ஒரு பின்னூட்டம்

Thursday 16 June, 2011

""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,''

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.


""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

நன்றி http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258416

Tuesday 7 June, 2011

சமச்சீர் கேபிள் டிவி

நடுநிலையாளர்களிடம் ஜெயலலிதா அவர்கள் கண்டபடி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். சென்ற ஆட்சியில் கொண்டு வந்த கடைக்கோடி மனிதனும் நன்மைபெறும் திட்டங்களை எல்லாம் ரத்து செய்து விட்டதால் அவர் அந்த நடுநிலையாளர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நாம் கொடுக்கும் திட்டம்தான் சமச்சீர் கேபிள் டிவி திட்டம்.

நாட்டில் இப்போது பல டிவிக்கள் பல டிடிஎச்கள் வந்து விட்டன. மக்களும் எதைப்பார்பபது எதைவிடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். கட்டணங்களும் கண்டபடி இருக்கின்றன. ஆனால் தமிழ் நாட்டின் கடைக்கோடி மனிதனும் பயன்பெரும் திட்டம்தான் இந்த சம்ச்சீர் கேபிள் டி.வி திட்டம்.

இதன்படி அனைத்து சேனல்களும் ஒரேமாதிரியான நிகழ்ச்சிகளைத்தான் ஒளிப்பரப்ப வேண்டும்.

குடும்ப பெண்களை மிகவும் குழப்பும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் வருவதால் அந்த நிகழ்ச்சிய்களை எடுக்கும் பொறுப்பு ராதிகாவின் கம்பெணிக்கும் குஷ்புவின் கம்பெணீக்கும் வழங்கப் படும். அவர்களிடமிருந்து மட்டுமே அனைத்து குடுமப சீரியல்களும் பெறப்படும். அவர்களிடமிருந்து வருவஹ்டால் அரசு தரத்தை உறுதி செய்து கொள்ளும். தவறு செய்யும் நேரத்தில் சுட்டிக்காட்டவும் முடியும்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் அனைத்த்து தொலைக்காட்சிகளும் அந்த் நிகழ்ச்சீயை ஒளிபரப்பிக் கொள்ளலாம். அதற்காக கலைஞர் டிவிக்கு எந்த காசும் கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் கலைஞர் டிவியில் வரும் விளம்பரங்கள் தவிர வேறெதையும் ஒளிபரப்பக் கூடாது.


நாட்டில் பொதுமக்களின் அறிவை வளர்க்கும் வகையில் எல்லா ஊர்களிலும் இருக்கும் கேபிள் டிவிகளும் செய்திச் சேனல்கள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். அவர்கள் இலவசமாக கலைஞர் டிவியில் வரும் செய்திகளை உபயோக்ப படுத்திக் கொள்ளலாம் இதற்காக கலைஞர் டிவி எந்த காசும் பெற்றுக் கொள்ளாது. உள்ளூர் செய்திகளுக்கு திருச்சிக்குத் தெற்கே கலைஞர் டிவியிலிருந்தும் திருச்சிக்கு வடக்கே சன் டிவியில் இருந்தும் குறைந்த கட்டணத்தில் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

நகைச்சுவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் வடிவேலுவும் ஐ.லியோனியும் நியமிக்கப் படுவார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவர்களின் அலோசனையை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியும்.

திரைப்படங்கள் அனைத்தும் கலைஞர் டிவியிலிருந்து ஒளிப்பரப்பாகும். இதை மற்ற தொலைக்காட்சிகள் எந்தக் கட்டணமும் இன்றி ரிலே செய்து கொள்ளலாம். ஆனால் எந்த க் கூடுதல் விள்மபரத்தையும் ஒளிப் பரப்பக் கூடாது.

மற்ற டிவிக்கள் ஏதாவது படங்களைத் திரையிட நினைத்தால் அதையும் கலைஞர் டிவியின் மூலமாகவே ஒளிபரப்பிக் கொள்ளலாம். இந்தப் படத்தை ஒளிபரப்புவதற்க்கா எந்த பணத்த்தையும் படத்தயாரிப்ப்பாளரிடமிருந்தோ, அந்த டிவியிலிருந்தோ கலைஞ்ர் டிவி பெற்றுக் கொள்ளாது. தமிழக மக்களின் ந்லனைக் கருத்தில் கொண்டு இந்த சேவையை இலவசமாகவே வழங்கும்

கல்வி நிகழ்ச்சிகள், வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சிகளை இனிமேல் ஜெயா டிவி ஒளிபரப்பும்.


இந்த சமச்சீர் கேபிள் டிவி திட்டத்தை மட்டும் அம்மா அறிமுகப் படுத்தி விட்டால் எல்லா நடுநிலையாளர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.