Friday 27 May, 2011

வெங்காயம் பதில்கள் 26-5-11

1.மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த்தாக எதிர்கட்சிகள் சொல்லிக் கொண்டு இருப்பதால்
மாற்றத்தை கருத்தில் கொண்டு பழைய ஆட்சியின் முடிவு மாற்றப் பட்டிருக்கலாம்.

2.புத்தர் சிலை வைக்கும் திட்ட்த்தை ஏன் மாயாவதி கைவிட்டார்?
இப்படித்தான் அசோகர் அந்தக் காலத்தில் புத்தர் புகழ்பரப்ப அவரது சாம்ராஜ்யமே முடிவுக்கு வந்த்து.

3.கனிமொழி கைதிசெய்யப்பட்ட்தில் தங்களை பாதித்த விஷயம்?
ஐந்து வயதிலிருந்து அவர் போட்டிருக்கும் மூக்குத்தியை கழட்டச் சொல்லிவிட்டார்களாம்.
பத்திரிக்கைகளில் படித்தபோது கண்கள் பனித்தன.

4.இந்தியாவுக்கு எதிராக உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் பயிற்சி கொடுத்தது என, மும்பைத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த டேவிட் கோல்மென் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளாரே
சட்டப்படி எதையும் சமாளித்துவிட்லாம் என்ற தைரியம்தான் காரணம்

5.ராஜ்பவன் சிறைச்சாலை; நான் சிறைப்பறவை: கவர்னர் பரத்வாஜ் சொல்வது பற்றி

சிலருக்கு சிறை வாசம் இல்லாவிட்டால் தூக்கம்வராது.

6.பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்
பெங்களூரு அணிதான் கோப்பையை செல்லும் என்று ஐ.பி.எல் சூத்திரம் தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

7.Temple திருப்பதியில் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு சப்பாத்தி! திருப்பதியில் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு சப்பாத்தி!
தேச ஒருமைப் பாட்டு பிரசாதம்.

No comments:

Post a Comment