Sunday 30 October, 2011

கணவனில்லாதவளின் குழந்தை

இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி வந்தது. திருமணமான புது மாப்பிள்ளை ஏரியில் மூழ்கி இறந்து விட்டாராம். என்ன கொடுமை பாருங்கள். இனி அந்தப் பெண்ணின் கதி? சில நாள் குடும்பம் நடத்தியதில் ஒரு வேளை குழ்ந்தை உருவாகி இருந்தால் அந்தக் குழந்தை இனி தகப்பன் இல்லாத குழந்தைன்னுதான் சொல்வாங்க.

இதுக்கெல்லாம் தான் என்ன தீர்வுன்னு யோசிச்சு பாருங்க. சுலபமா ஒரு தீர்வு இருக்குங்க. ஏரிகளையெல்லாம் மூடிட்டா போதுங்க. ஏற்கனவே கல்பாக்கத்தில் ஏரி இருக்கு. தாராப்பூர்ல ஏரி இருக்குன்னு சொல்றாங்க. சொல்லிட்டுப்போறாங்க. இங்க ஏதாவது மாப்பிளை விழுந்து செத்தா என்ன நடக்கும் யோசிச்சுப் பாருங்க.

வாங்க நாம ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்போம். ஏரிகளை மூடச்சொல்லுவோம். பயமே படாதீங்க. யாராவது வந்தால் அவங்க வீட்டுப் பொண்ணு இப்படி நின்னா என்ன பண்ணுவீங்கண்ணு கேட்போம். கண்டிப்பா ஒத்துவிக்குவாங்க. இனிமேல் மாப்பிள்ளையோட உயிர் உத்தரவாதமா இருக்கும்ம்னு நம்பிக்க்லாம்.

1 comment:

SURYAJEEVA said...

ஏரியில் தானா விழுந்து செத்தா தற்கொலை, தள்ளி விட்டா கொலை...

Post a Comment