Tuesday 7 June, 2011

சமச்சீர் கேபிள் டிவி

நடுநிலையாளர்களிடம் ஜெயலலிதா அவர்கள் கண்டபடி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். சென்ற ஆட்சியில் கொண்டு வந்த கடைக்கோடி மனிதனும் நன்மைபெறும் திட்டங்களை எல்லாம் ரத்து செய்து விட்டதால் அவர் அந்த நடுநிலையாளர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நாம் கொடுக்கும் திட்டம்தான் சமச்சீர் கேபிள் டிவி திட்டம்.

நாட்டில் இப்போது பல டிவிக்கள் பல டிடிஎச்கள் வந்து விட்டன. மக்களும் எதைப்பார்பபது எதைவிடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். கட்டணங்களும் கண்டபடி இருக்கின்றன. ஆனால் தமிழ் நாட்டின் கடைக்கோடி மனிதனும் பயன்பெரும் திட்டம்தான் இந்த சம்ச்சீர் கேபிள் டி.வி திட்டம்.

இதன்படி அனைத்து சேனல்களும் ஒரேமாதிரியான நிகழ்ச்சிகளைத்தான் ஒளிப்பரப்ப வேண்டும்.

குடும்ப பெண்களை மிகவும் குழப்பும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் வருவதால் அந்த நிகழ்ச்சிய்களை எடுக்கும் பொறுப்பு ராதிகாவின் கம்பெணிக்கும் குஷ்புவின் கம்பெணீக்கும் வழங்கப் படும். அவர்களிடமிருந்து மட்டுமே அனைத்து குடுமப சீரியல்களும் பெறப்படும். அவர்களிடமிருந்து வருவஹ்டால் அரசு தரத்தை உறுதி செய்து கொள்ளும். தவறு செய்யும் நேரத்தில் சுட்டிக்காட்டவும் முடியும்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் அனைத்த்து தொலைக்காட்சிகளும் அந்த் நிகழ்ச்சீயை ஒளிபரப்பிக் கொள்ளலாம். அதற்காக கலைஞர் டிவிக்கு எந்த காசும் கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் கலைஞர் டிவியில் வரும் விளம்பரங்கள் தவிர வேறெதையும் ஒளிபரப்பக் கூடாது.


நாட்டில் பொதுமக்களின் அறிவை வளர்க்கும் வகையில் எல்லா ஊர்களிலும் இருக்கும் கேபிள் டிவிகளும் செய்திச் சேனல்கள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். அவர்கள் இலவசமாக கலைஞர் டிவியில் வரும் செய்திகளை உபயோக்ப படுத்திக் கொள்ளலாம் இதற்காக கலைஞர் டிவி எந்த காசும் பெற்றுக் கொள்ளாது. உள்ளூர் செய்திகளுக்கு திருச்சிக்குத் தெற்கே கலைஞர் டிவியிலிருந்தும் திருச்சிக்கு வடக்கே சன் டிவியில் இருந்தும் குறைந்த கட்டணத்தில் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

நகைச்சுவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் வடிவேலுவும் ஐ.லியோனியும் நியமிக்கப் படுவார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவர்களின் அலோசனையை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியும்.

திரைப்படங்கள் அனைத்தும் கலைஞர் டிவியிலிருந்து ஒளிப்பரப்பாகும். இதை மற்ற தொலைக்காட்சிகள் எந்தக் கட்டணமும் இன்றி ரிலே செய்து கொள்ளலாம். ஆனால் எந்த க் கூடுதல் விள்மபரத்தையும் ஒளிப் பரப்பக் கூடாது.

மற்ற டிவிக்கள் ஏதாவது படங்களைத் திரையிட நினைத்தால் அதையும் கலைஞர் டிவியின் மூலமாகவே ஒளிபரப்பிக் கொள்ளலாம். இந்தப் படத்தை ஒளிபரப்புவதற்க்கா எந்த பணத்த்தையும் படத்தயாரிப்ப்பாளரிடமிருந்தோ, அந்த டிவியிலிருந்தோ கலைஞ்ர் டிவி பெற்றுக் கொள்ளாது. தமிழக மக்களின் ந்லனைக் கருத்தில் கொண்டு இந்த சேவையை இலவசமாகவே வழங்கும்

கல்வி நிகழ்ச்சிகள், வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சிகளை இனிமேல் ஜெயா டிவி ஒளிபரப்பும்.


இந்த சமச்சீர் கேபிள் டிவி திட்டத்தை மட்டும் அம்மா அறிமுகப் படுத்தி விட்டால் எல்லா நடுநிலையாளர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

1 comment:

வெங்காயம் said...

இதன் மூலம் கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகள் மட்டுமே அனைத்து தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகும். எனவே விளம்பரங்கள் போடும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.

Post a Comment