Saturday 18 June, 2011

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கலைஞர் பாராட்டு

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரகள் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடித்ததில்

தி.மு.க., ஆட்சியில், 2006ம் ஆண்டு, 3,136 கோடி ரூபாய் மதிப்பில், எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலம், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கும். மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கும்.


வடசென்னை அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2,475 கோடி ரூபாய் மதிப்பில், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி, வரும் செப்டம்பர் மாதம் துவங்கும். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு திட்டங்கள் 8,362 கோடி ரூபாய் மதிப்பில், 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஒரு திட்டம், 2013ம் ஆண்டு மார்ச் மாதம், மற்றொரு திட்டம், செப்டம்பர் மாதம் உற்பத்தியை துவக்க உள்ளது.


கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 1,126 கோடி ரூபாய் முதலீட்டில், 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், 2009ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உற்பத்தி இம்மாதம் துவங்க உள்ளது. என்று கூறியுள்ளார்.


இந்த திட்டங்களின் பலனாகத்தான் அதிமுக ஆட்சியாளர்கள் மின்வெட்டை நீக்க முடியும் என்று சொல்லுகிறார்கள். எப்படியோ மின்வெட்டு நீங்கினால் மகிழ்ச்சிதான் என்று சொல்லியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


திமுக ஆட்சியில் மேற்கொண்ட இத்தனை திட்டங்களை அதிமுக ஆட்சியாளர் தொடர்ந்து சிற்பபுற நடத்துவதை கலைஞர் அவர்களே கடிதம் மூலம் பாராட்டியிருப்பது மக்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை உருவாக்கிருக்கிறத


மேலும் விவரஙக்ளுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=259456

1 comment:

தமிழ் மீரான் said...

அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தை தாரை வார்த்துக் கொடுத்து சொந்த நாட்டு மக்களை இருளில் தள்ளிய சாதனையையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

Post a Comment