Monday 28 November, 2011

கனிமொழிக்கு ஜாமின் வந்த வழி

மூட நம்பிக்கைன்னு கூட சொல்லிக்கங்க. கலைஞர் காங்கிரஸ்ல யாரை யாரையோ போய் பார்த்து வந்தார். டில்லிலயே போய் தவம் கிடந்தார். ஆனால் கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கல. ஆனா ஸ்டாலின் நிடின் கட்காரிய வெறும் மரியாதை நிமித்தம்தான் பார்த்தார். கூட்டணி பத்தியோ அரசியல் நிலவரம் பத்தியோ வருங்கால இந்தியா பத்தியோ எதுவுமே பேசல. ஆனா கனிமொழிக்கு ஜாமின் கிடைச்சிடுச்சு. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இருந்தா கூட இப்போதைக்கு திமுகவுக்கு ராசியான ஆளுங்க பா ஜ க வுல இருக்காங்க. இனிமே திமுக வுக்கு நல்ல காலம்தான்.

Friday 25 November, 2011

அடுத்தவன் அடிபடும்போது சந்தோசப் படும் ஜந்துக்கள்

தெரிஞ்சவரோ, தெரியாதவரோ அடிப்பட்டதாக கேள்விப் பட்டால் சராசரி மனிதனுக்கு என்ன தோன்றும்? ஐயோ பாவம், ஒன்றும் ஆபத்து இல்லையே என்று விசாரிப்பார்கள். ஒரு சிலருக்கு ஒன்றுமே தோன்றாது.

ஆனாப் பாருங்க. இப்ப சிலர் ஒரு அடியா? ரெண்டு அடியா என்று சந்தோஷமா கேட்கறாங்க. இன்னைக்கு பேப்பர்ல பார்த்தா அடிவாங்கினவர் அப்படிப்பட்டவர் இப்படிப் பட்டவர் அப்ப்டின்னு சொல்லி அடிச்சவனுக்கு வக்காலத்து வாங்கறாங்க

எனக்கு என்ன டவுட்னா இப்படிப் பேசறவங்கள நீ ரா-ஒன்னு கரினாவோட தொப்புளப் பார்த்த அதனால கலாச்சார சீரழிவுன்னு யாராவது அடிச்சா அடிய விடுங்க பாஸ். அந்த அவமானம் உங்களுக்கு பெரிசா தெரியாதா? உங்க வீட்டுப் பொண்ணு நடக்கும்போது கொஞ்சூண்டு இடுப்பு தெரியமாதிரி இருக்கு அதனால ஊர் வாலிபர்கள் கெட்டுப் போறாங்கன்னு சொல்லி ஏதாவது தண்டனை கொடுத்தா நீங்க இப்படித்தான் பேசுவீங்களா பாஸ்.

=============================================
கண்டிப்பாக சரத்பவாரை அடித்த ஹர்விந்தர் சிங்கும் அவனை ஆதரிக்கு அனைத்து கொடூர பிறவிகளும் கண்டிக்க, தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அட்லீஸ்ட் திருந்துங்க பாஸ்

Monday 7 November, 2011

விதி மச்சான்ஸ்

எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற்ற பிறகு இரண்டு மாதத்தில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2011-ல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டது. இன்னும் இந்தச் சுமையையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேலும் ரூ.1.80 விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப்பெறாவிட்டால் மத்தியில் காங்கிரஸýக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் அச்சுறுத்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. திமுக உள்ளிட்ட ஏனைய கூட்டணிக் கட்சிகளும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன.

இந்த பெட்ரோல் விலை உயர்வை நிதியமைச்சகம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இருந்தும்கூட, இதற்கு நிதியமைச்சகம் உடன்படவில்லை. பெட்ரோலிய அமைச்சரும் நிதியமைச்சரும் சந்தித்துப் பேசியும்கூட உடன்பாடு எட்ட முடியவில்லை.

இந்திய அரசு பெட்ரோல் மீது ரூ.14.35 வரி விதிக்கின்றது. இதில் ரூ.6.35 சுங்கவரி, ரூ.6 கூடுதல் தீர்வை, இதனினும் கூடுதல் தீர்வையாக சாலை மேம்பாட்டுக்காக ரூ.2 மேலும் வசூலிக்கப்படுகிறது. பிறகும் ஏன் தங்க நாற்கரச் சாலையில் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்று கேட்டுச் சலித்துவிட்டது.

இதில் ஏதாவது ஒரு தீர்வையில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதில் மத்திய நிதியமைச்சகம் மிகவும் கறாராக மறுப்புத் தெரிவித்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தின. இந்த விவகாரங்கள் நிச்சயமாக பிரதமருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவர் தெரிந்துதான் இந்த விலை உயர்வை அனுமதித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசு தரும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்த நாள் முதலாகக் கூறி வரும் பொருளாதார வளர்ச்சிக்கான பாடம். ஆனால், எந்த நேரத்தில் மானியங்களை விலக்கிக் கொள்வது என்கிற கட்டுப்பாடு இல்லாமல், எப்போது மானியத்தின் தேவை மிக இன்றியமையாததோ அந்த நேரத்தில் விலக்கிக் கொண்டால் எப்படி?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வு 10.1 விழுக்காடு என்ற நிலையில் உயர்ந்து கிடக்கும்போது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருள்களின் விலை மேலும் உயராதா? இதுகூட மத்திய அரசுக்குத் தெரியாதா?

பிரதமர் மொரார்ஜி தேசாய் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை என்னவென்றால், நியாயவிலைக் கடைக்குப் போய் சர்க்கரை வாங்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போனது என்பதுதான்.

ஜனதா ஆட்சிக்கு மொரார்ஜி தலைமையேற்றிருந்த நாளில், சர்க்கரை அரசியலில் இருக்கும் அனைத்துச் சிக்கலையும் நீக்கியதுடன், வெளிச்சந்தை சர்க்கரையின் விலையும், நியாயவிலைக் கடையில் கிடைக்கும் சர்க்கரையின் விலையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் நிலைமையை உருவாக்கினார். அதற்கு முன்புவரையிலும், நியாயவிலைக் கடையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் பாதியாக, மானியம் கொடுத்து விலைக்குறைப்பு செய்யப்பட்ட சர்க்கரை கிடைத்த காரணத்தால் மக்கள் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கினார்கள். விலை எல்லா இடங்களிலும் ஒன்று என்றான பின்பு இந்த மானியம் குறித்தோ அல்லது நியாயவிலைக் கடைச் சர்க்கரை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. தற்போது மீண்டும் நியாயவிலைக் கடையில் சர்க்கரை கிலோ ரூ.13.65-க்கும் வெளிச்சந்தையில் ரூ.30-க்கும் விற்கப்படும் நிலை வருவதற்கு வழிசெய்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

விலைஉயர்வு வெறும் 6 விழுக்காடு அளவுக்கு இருக்குமானால், பெட்ரோல் விலை உயர்வு குறித்து இந்த அளவுக்கு யாரும் எதிர்ப்பு சொல்லப்போவதில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே போகும்போது இத்தகைய பெட்ரோல் விலை உயர்வினால் மற்ற பொருள்களின் விலையும் உயரத்தானே செய்யும்?

பெட்ரோல் விலையை அரசு உள்வாங்கி, மானியம் தந்து ஈடு செய்யும் வழக்கம் நீக்கப்பட வேண்டும் என்பது அரசின் உறுதியான திட்டம் என்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? யார்யாரெல்லாம் பெட்ரோலை அதற்குரிய விலையில் வாங்க வேண்டும் என்பதையும், யார் யார், எந்தெந்தப் பயன்பாட்டுக்கு பெட்ரோலை மானிய விலையில் பெறலாம் என்பதையும் பிரிக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே விலையில் பெட்ரோல் வழங்குவதன் மூலம், பெட்ரோலியப் பொருளை வீணடிப்பவர்கள் பணம் வசதி படைத்தவர்களாகவும், விலைஉயர்வால் அவதிப்படுவோர் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களாகவும் இருக்கிறார்கள்.

கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி வந்து கொடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெறும் லாபம் அபரிமிதமானது. இதை ஏன் அரசு நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களே செய்யக்கூடாது? என்ற கேள்விக்கும் பதில் இல்லை. ஏன் தீர்வையை குறைந்தது ரூ.2 விலக்கு அளித்து, இந்த ரூ.1.80 விலை உயர்வைத் தவிர்க்கக்கூடாது? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

பத்திரிகைகளில் தங்கம் விலை என்று தனி பத்தியில் ஒவ்வொரு நாளும், "இன்று ரூ.40 உயர்ந்தது", "இன்று தங்கம் விலை ரூ.10 குறைந்தது' என்று செய்தி வருவதைப் போல, இனி இந்தியாவில் பெட்ரோலுக்கும் தினசரி விலை விவரம் எழுதப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்பதுகூடத் தெரியாமல், ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இன்னொருபுறம் விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசிக்கும் விசித்திரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். நடப்பது பொருளாதார மேதைகளின் ஆட்சியாயிற்றே!

நன்றி:-http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=502899&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Sunday 30 October, 2011

கணவனில்லாதவளின் குழந்தை

இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி வந்தது. திருமணமான புது மாப்பிள்ளை ஏரியில் மூழ்கி இறந்து விட்டாராம். என்ன கொடுமை பாருங்கள். இனி அந்தப் பெண்ணின் கதி? சில நாள் குடும்பம் நடத்தியதில் ஒரு வேளை குழ்ந்தை உருவாகி இருந்தால் அந்தக் குழந்தை இனி தகப்பன் இல்லாத குழந்தைன்னுதான் சொல்வாங்க.

இதுக்கெல்லாம் தான் என்ன தீர்வுன்னு யோசிச்சு பாருங்க. சுலபமா ஒரு தீர்வு இருக்குங்க. ஏரிகளையெல்லாம் மூடிட்டா போதுங்க. ஏற்கனவே கல்பாக்கத்தில் ஏரி இருக்கு. தாராப்பூர்ல ஏரி இருக்குன்னு சொல்றாங்க. சொல்லிட்டுப்போறாங்க. இங்க ஏதாவது மாப்பிளை விழுந்து செத்தா என்ன நடக்கும் யோசிச்சுப் பாருங்க.

வாங்க நாம ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்போம். ஏரிகளை மூடச்சொல்லுவோம். பயமே படாதீங்க. யாராவது வந்தால் அவங்க வீட்டுப் பொண்ணு இப்படி நின்னா என்ன பண்ணுவீங்கண்ணு கேட்போம். கண்டிப்பா ஒத்துவிக்குவாங்க. இனிமேல் மாப்பிள்ளையோட உயிர் உத்தரவாதமா இருக்கும்ம்னு நம்பிக்க்லாம்.

இனியாவது ரோஷம் வருமா?

எனக்கொரு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு திமுக காரங்க மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் மேட்டர் ஏன் இன்னும் காங்கிரஸோட காலடியில் திமுக இருக்காங்க அப்படிங்கறதுதான்.

ஆட்சி பிடிக்க, பதவிய காப்பாத்திக்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுவும் போச்சு.

கனிமொழிய காப்பாத்த அப்படின்னு சொன்னாங்க புடிச்சு உள்ள வைச்சு பல நாள் ஆச்சு, ஒண்ணும் நடக்கறமாதிரி தெரியல. பேச நானும் தியாகிதான் நானும் தியாகிதான் சொல்லிட்டு அன்னா ஹஜாரே மாதிரி இனிமேல் சிறையில்தான் இருப்பேன். ஜாமீன் கிடைச்சாகூட வெளிய வரமாட்டேன். குற்றவாளி இல்லைன்னு முடிவு வந்தபிறகுதான் வெளிய வருவேன்னு தைரியமா சொல்லிகிட்டு இருக்கலாம். ஏற்கனவே கல்லக்குடி போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம். ஓடுற ரயில்பாதையிலயே தலை வச்ச அப்பா, அம்மாவோட ரத்தம் ஓடுற ஆள்தான் தைரியத்துக்கு குறைச்சல் இருக்காது. ஜாமின் கிடைச்சதுன்னா வெளிய வந்திரலாம். அது வரைக்கும் பில் டப்லயே இருக்கலாம். அதுவும் பண்ண மாட்டேங்கறாங்க.

அழகிரி மத்திய அமைச்சரா கொஞ்ச நாளைக்கு இருந்திட்டு போறாருன்னு சொன்னா அவர் அமைச்சரா இருக்கறதால ஒரு நன்மையும் இருக்கறமாதிரி தெரியல. அம்மா அவர தொரத்து தொரத்து தொரத்தராங்க . இப்ப என்னடான்னா அஜித் சிங் கூட கூட்டணி போடணும் அப்படிங்கறதுக்காக அழகிரியோட துறையையும் புடிங்கிடுவாங்க போல இருக்குது.

உள்ளாட்சித் தேர்தல்ல தனியா நின்னு மிரட்டுனாங்கன்னு பார்த்தா அவங்கதான் கூட்டணிக்கு வராம தனியா போன மாதிரி ஆயிட்டுச்சி. இவரு திரும்பவும் போய் டெல்லில சமாதானம் பேசிட்டு வராரு.

என்ன கொடுமை இது? ஒரு டெட்ர் இப்படின்னு டெயில் எண்ட்டர் மாதிரி பயந்து நடுங்கறது அவருக்கு மட்டுமிலல. அவர் வாழற தமிழ்நாட்டுக்கே அசிங்கம். இன்னும்கூட ரோஷம் வரலேன்னா எப்படி?

Wednesday 26 October, 2011

கலைஞர் என்னும் பொதுநலவாதி

தமிழ்கத்திற்கு பிரயோஜனம் நிறைந்த கலைஞ்ரின் டெல்லி பயணம்

1. கூடங்குளம் அணுமின் நிலையம்,
2.இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம்,
3. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது,
4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது,

ஆகிய முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி கலைஞர் அவர்கள் பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் சோனியாவை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.

அதே நேரத்தில் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய ரெண்டு அமைச்சர்கள் பற்றியோ எம்.பி.கனிமொழி ஜாமின் பற்றியோ பேசவில்லை.

பாருங்களேன். என்ன ஒரு பொறுப்புணர்ச்சி. தமிழக மக்கள் அவரது பதவியைப் பிடுங்கி உள்ளாட்சிகளில் அதகளம் பண்ணியபிற்கும் கூட தமிழ்க மக்களுக்காக உழைக்கிறார். பிரதமரிடம் நாடுநிலைமை பற்றி பேசுகிறார். கூட்டணிக் கட்சி தலைவரிடம் அவரது உடல் நிலமை பற்றி மட்டும் பேசிவிட்டு வருகிறார். அவரது கட்சி நலம் பற்றியோ குடும்ப நலம் பற்றியோ எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் மட்டும் செலவளித்துள்ளார்.

**********************************************************
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
************************************************************

இதையெல்லாம் தமிழ்நாட்டில் நேற்றுப் பிறந்த குழந்தை கூட நம்பாது. எதுக்காக இப்படியெல்லாம் பூசி மெழுகறாங்கன்னே தெரியல.
மத்திய அரசு கூட்டணில இருக்கறதால கலைஞ்ர்க்கோ, கட்சிக்கோ எந்த ஒரு நன்மையும் இருக்கறதா தெரியல. குறைஞ்சது போலிஸ் கேஸாவது இல்லாம பாத்துக்காவங்கன்னு பார்த்தா அதெல்லாம் அவங்களோட தூண்டல்னால் நடக்கறமாதிரியே இருக்கு.
இல்ல காங்கிரஸுக்கு பயங்கர ஓட்டு வங்கி இருந்து அவங்க இருந்தாதான் தமிழ்நாட்டில் ஆட்சிய புடிக்கமுடியும்ன்னுநினைச்சா அதுவும் இல்லைன்னு ஆயிறுச்சி.

பொதுநலனுக்காக சிந்திக்கறவங்கதான் ஆட்சிக்கு வரணும். குறைந்த் பட்சம் சுயநலமா சிந்திச்சா தான் குடும்பத்தக் காப்பாத்த முடியும். இவங்க சுயநலமாவும் இருக்க தெரியல. பொதுநலத்துக்காக செயல் படுறதப் பத்தி கேட்கவே வேண்டாம்.

பேசாம ஒவ்வொரு நாளும் சிறையில் இருப்பதைப் பற்றி லைவ் டெலிகாஸ்ட் போட்டு அதையே ஒரு போராட்டம் மாதிரி காட்டி ஒரு பில்டப் கொடுக்கலாம். நூறாவது நாள் கொண்டாடலாம்.

திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.

Tuesday 25 October, 2011

வேலாயுதம் ஒருஜினல் தீபாவளி?

விஜயின் வேலாயுதம் படம் பார்த்தீங்கண்ணா அவரோட அரசியல் பிரவேசத்திற்கும் படத்தோட பேருக்குமே நெருங்கிய ஒற்றுமை இருக்கறமாதிரி இருக்குங்க.
மொதல்ல விஜய் திமுக அனுதாபியா இருந்தார். ஸ்டாலின் மேல இருக்கற பற்று காரணமா இளைய தளபதின்னு பேரு கூட தனக்குத்தானே வச்சிக்கிட்டு இருந்தார். அந்தக் காலத்திலயே படத்தில ஒரு பாட்டுப் பாடி இந்தப் பாடலைப் பாடியவர் இளைய தளப்தின்னு போடச் சொல்லி அத டிவியில ஒளிபரப்பி ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தார். உதயான்னு ஒரு படம் கூட எடுத்தார். திமுக் அரசாங்கம் மூலமா நன்கொடை எல்லாம் கொடுத்தார்.

அதற்கப்புறம் திமுகவுல் உள்ளவர்களுக்கு அவருக்கும் என்னவோ பிரச்சனைகள் சொல்லிக்கிட்டாங்க. அவர் படமே ரிலிஸ் ஆக போச்சு. அப்புறம் அம்மாவ சந்திச்சாரு. அப்படி இப்படின்னு காவலன் ரிலீஸ் பண்ணீனாரு. தேர்தல்ல அவங்க அப்பா அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தாரு. அதிமுக செயித்தவுடனே ஒரு சூப்பரா ஒரு ட்ரெயிலர வேலாயுதம் படத்துக்கு எடுத்து ரிலீஸ் ப்ண்ணினாரு.



====================================================

புராணக் கதைல பாத்தீங்கண்ணா அப்பா சிவபெருமானோட மகன் முருகன். சிவ்பெருமானோட வரம் பெற்ற ஆட்கள் சூரன் குரூப்ஸ் இம்சை தாங்க முடியாம போச்சு. அப்பானால அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமை. இப்பத்தான் அம்மா எண்ட்ரி கொடுக்கறாங்க. அப்பாவோட புள்ளைக்கு தன்னோட சக்திய திரட்டி ஆயுதமா தர்ராங்க. அதுதான் வேலாயுதம். அத பயன்படுத்தி முருகன் சூரன் பிரதர்ஸை அழிச்சர்ராரு. இதுதான் வேலாயுதம் கதை. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு ஒற்றுமை ஓடிக்கிட்டே இருக்கு பாத்தீங்களா.

சோ வேலாயுதம் கண்டிப்பா வெற்றித்தான்னு நினைக்கறீங்களா


ஆனா பாத்தீங்கண்ணா இன்னைக்கு தீபாவளி. தீபாவளி ஏன் கொண்டாடரோமுன்னா ம்கன் பண்ற இம்சை தாங்கமுடியாத அம்மா அவங்களே டைரக்டா வந்து கதையை முடிக்கறாங்க. என்னமோ தீடின்னு இந்தக் கதை ஞாபகம் வந்து தொலைக்குது.

காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைச்சத விட வேலாயுதம் படத்துக்கு சாதா தியெட்டர்களாதான் கிடைச்ச மாதிரி தோணுது. ஏம்பாஸ். ஏதாவது தீபாவளி ஆகிப் போயிட்யுமா?